ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை

பதிகங்கள்

Photo

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில்
இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.

English Meaning:
That Light Dispels Soul`s Darkness

Easy to enter the Universe of Eight;
That spreading Light of immense vastness
Dispels the Primordial darkness entire;
In the Mystic Lotus within as day-light it spreads;
Dispelling contending Pasas,
Was my Lord there seated.
Tamil Meaning:
நிவிர்த்தி கலையில் `நூற்றியெட்டு` என்றும், பிரதிட்டா கலையில் `குய்யாட்டகம், அதிகுய்யாட்டகம், குய்யதராட்டகம்` என்று இன்ன பலவாகவும் எட்டு எட்டாகச் சொல்லப்படுகின்ற, சகல வருக்கத்தினராலும் எளிதில் அடையப்படும் புவனங்களிலும் ஞான ஒளியைப் பரப்பி அறியாமையாகிய இருளைப் போக்குகின்ற சிவனாகிய ஞாயிறு வெளிப்பட்டு விளங்குவதும் உள்ளதுமாகிய தாமரையிலேயாம். அத்தாமரையில் அந்த ஞாயிறாகிய சிவன் ஒன்றோடு ஒன்று மாறுபட்ட இரு நிற ஒளியுடையனாய் விளங்குகின்றான்.
Special Remark:
`அதனை அறிவுடையார் உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். மாறுபட்ட இருநிற ஒளிகளாவன சிவப்பும், நீலமும். இவை முறையே சிவமும், சத்தியும் ஆகும். நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் உள்ள புவனங்கள் எட்டு எட்டாகச் சொல்லப்படுதலைச் சிவாகமங்களிலும் சிவஞான போத மாபாடியம் முதலியவற்றிலும் காண்க. அவை சகல வருக்கத்தினர்க்கு இடமாதல் பற்றி, `புகல் எளிதாகும்` என்றார். திருவருள் அண்டத்திலும் ஞானிகட்கு விளங்குதல் பற்றி ``அகல் ஒளி செய்து இருள் ஆசற வீசும் பகல்`` என்றார். அகல் ஒளி - விரிந்த ஒளி. தாய் - தாவ; பாவ. ஆகமலம் இருள் மலம் ஆணவம். வீசுதல் - அகற்றுதல். பகல் - பகலவன் `இருள் மலம் அகற்றும் பகலவன்` என்றதனால் அது சிவனாகி ஞாயிறாயிற்று. ஒளி செய்தல் ஒளியைத் தருதல். ``செய்ததும்`` என்னும் உம்மை இருத்தலாகிய எதிர் வருவதனைத் தழுவிற்று `சிவ ஒளி அண்டம், பிண்டம் இரண்டிலும் விளங்கி அறியாமையாகிய இருளைப் போக்கும் என்றபடி.
இதனால், மேற்கூறிய ஒளிகளில் ஆன்ம அறிவிற்குக் காட்டாகி நிற்கும் சிவ ஒளியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.