ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை

பதிகங்கள்

Photo

மேலொளிக் கீழதின் மேவிய மாருதம்
பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும்
ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

English Meaning:
That Light Engrosses the Light of the Five Elements

Below that Light Above
Is the wind, earth, fire, sky and water;
Rousing the Light (of Kundalini) within
You shall in the astral sphere be;
There indeed is the one Light
That engrosses the lights of elements five.
Tamil Meaning:
எல்லா ஒளிகளினும் மேலான ஒளியாகிய திருவருள் ஒளியின்கீழ் அதினின்றும் தோன்றியனவை, விரிந்து பரந்த ஒளியை யுடைய ஆகாயம், காற்று, ஒளிப்பொருளாகிய தீ, நீர், நிலம் ஆகியவை. இவை ஐந்தும் உயிர்கட்கு அறிவைத் தந்து, ஆகாயம் ஒன்றிற்குள்ளே ஏனை நான்கும் அடங்கியிருப்பினும், இவை ஐந்தும் ஒடுங்கும் இடம் திருவருள் ஒளிதான்.
Special Remark:
மேவிய - மேவின. செய்யுள் நோக்கிப் பூதங்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. செவ்வெண்ணாகச் சொல்லப்பட்ட இவற்றின் இறுதியில் `ஐந்தும்` என்னும் தொகை வருவித்து, ``மேவிய`` என்பதற்கு முடிபாக்கிப் பின், `ஐந்தும் ஒளி செய்து விசும்பின் ஒன்றினும் ஒருங்கு ஒளி ஓரொளியாம் என இயைத்து முடிக்க. முதலடி இன எதுகை. `பரந்த` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. ஐம்பூதங்களும் தூல சரீரமாகி, ஒளி செய்வனவாகக் (அறிவைத் தருவனவாக) கூறினார். ஒருங்குதல் - ஒருசேர அடைதல். `ஒடுங்கொளி` என்றே பாடம் ஓதுதலுமாம். `மாயா காரியங்கள் ஆன்மாவிற்கு விளக்காய் அமையினும் அவை திருவருளால் விளக்கம் பெருவனவே, என்பது கூறியவாறு.
இதனாலும் `அனைத்து ஒளிகட்கும் மூல ஒளி அருள் ஒளியே` என்பது வலியுறுத்தப்பட்டது.