ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
    இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
    பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
    சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.
  • 10. இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
    அன்புசெய் வீர்தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்துப்
    பண்புறு வீர் பிறவித்தொழி லேநின்று
    துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.
  • 11. மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
    மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.
  • 12. சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன்
    பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும்
    கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும்
    சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.
  • 13. முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
    எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை
    நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
    அத்தகு சோதி யதுவிரும் பாரே.
  • 14. நியமத்த னாகிய நின்மலன் வைத்த
    உகமெத் தனையென் றொருவருந் தேறார்
    பவமத்தி லேநின்று பாய்கின்ற தல்லால்
    சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.
  • 15. இங்கித்தை வாழ்வும் எனைத்தோ ரகிதமும்
    துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
    விஞ்சத் துறையும் விகிர்தா எனநினை
    நஞ்சற் றவர்க்கன்றி நாடாஒண் ணாதே.
  • 16. பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்மன்னி
    வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை
    அஞ்சுவன் நாதன் அருநர கத்திடும்
    செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.
  • 17. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
    அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
    அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
    குருவை வழிபடிற் கூடலும் ஆமே.
  • 18. நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக்
    கருமங்க ளாலே கழிதலின் கண்டு
    குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால்
    பரம் என்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.
  • 19. ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
    மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
    நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து
    மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.
  • 2. செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை
    வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
    இல்லை எனினும் பெரிதுளன் எம்மிறை
    நல்ல அரன்நெறி நாடுமின் நீரே.
  • 3. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
    சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
    நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
  • 4. போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை.
    நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
    காற்றிசைக் குங்கம ழாக்கையைக் கைக்கொண்டு
    கூற்றுதைத் தான்றனைக் கூறிநின் றுய்மினே.
  • 5. இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
    புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
    எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று
    அக்காலம் உன்ன அருள்பெற லாமே.
  • 6. போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
    ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
    சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
    ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.
  • 7. பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின்
    இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
    சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
    பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.
  • 8. கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
    பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
    ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
    நீடிய ஈற்றுப் பசுவது வாமே.
  • 9. விடுகின்ற சிவனார் மேலெழும் போது
    நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம்
    கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
    இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.