ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

English Meaning:
Seek the Lord and Be Blessed

On them who seek Him
He, His blessings bestows;
To them, who do not
He sorrows of birth gives;
To those who intensely adore Him.
He reveals the Grace of His Holy Feet;
Joining the horde of Devas
They seek and realize Him,
Him, the Fire-hured Lord.
Tamil Meaning:
பொதுவாக, `தேவரைச் சேர்தல்` என்பது தேவரை அவரை உணரும் நெறியிற் சென்று உணர்தலே யாகும். அம்முறையில் சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்ப நிலையாகிய வீட்டையும், சாராது நீங்கினவர்கட்குத் துன்ப நிலையாகிய பிறப்பையும் கொடுப்பான். இதனை உணர்ந்து அவனிடத்தில் அன்பு மிகப் பெற்றவர்கட்கே அவன் தனது திருவடி நிழலைத் தருவான்.
Special Remark:
`அதனைப்பெற முயலுங்கள்` என்பது கருத்து, முதல் இரண்டு அடிகளில் சிவனது இயல்பையும், மூன்றாம் அடியில், `அவ் வியல்பினை மக்கள் உணர்தல் வேண்டும்` என்பதையும் கூறினார். ஆதலின், அது `கூறியது கூறல்` ஆகாமை யறிக. `சிவபெருமானைச் சார்தலாவது இது` என்று உணர்த்துவார் பொதுவாகத் தேவரைச் சாருமாறு கூறினார். அங்ஙனம் கூறிய ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க.
``சலம்இலன் சங்கரன்; சார்ந்த வர்க்கலால்
நலம்இலன்; நாடொறும் நல்குவான் நலன்`` -தி.4 ப.11 பா.6
என்று அருளிச் செய்ததும் காண்க. பிறவியை ``இன்னாமை`` என்றமையால், இன்பமாவது வீடாயிற்று.