ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்மன்னி
வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்திடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

English Meaning:
Fate of Knaves who Seek the Holy Guru

Some, who, knaves in real are,
Seek the Holy Guru;
If such be there,
Famine strikes the land;
At them even the Lord is appalled;
And to bottomless hell He consigns them;
To meet them
Who the righteous path tread,
That is Siddhi, verily.
Tamil Meaning:
தமக்கு ஞானத்தை அளித்த நல்லருள் ஆசிரியரிடத்து அவரையும் ஏனைப் பலரொடு ஒப்ப நினைக்கும் நேர்மையில்லாத மனத்தையுடைய மாணாக்கர் நன்மாணாக்கருள் தாமும் ஒருவராய் இருந்து அவர்கள் போல ஒழுகிவருவாராயின் அவரது கரவொழுக்கத்தால் நாடு பஞ்சத்தை எய்தும். அவரை அணுகச் சிவனும் அஞ்சுவான். அதனால் அவரைப் பின்பு அவன் மீளுதற்கரிய நரகத்தில் இடுவான். நேர்மையான மாணாக்கரைக் கண்ணால் கண்டவர்கட்கும் நற்பேறு உண்டாம்.
Special Remark:
``ஆம்புவி`` என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. ``பஞ்சமும் ஆம்`` என்பதனை, ``வைகில்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, `ஏனைத் தீங்குகளே யன்றி` என இறந்தது தழுவி நின்றது. ஈற்றடி, இதற்கு ஏதிராக, நன் மாணாக்கர் உள்ள நாடு நலம் பல எய்துதலை உணர்த்தியவாறு எனவே, இதனால் குருவை நம்மனோரில் ஒருவராக எண்ணுதலின் குற்றமே இனிதுணர்த்தப் பட்டதாம். `செஞ்செவே நிற்போர், என்பது, ``செஞ்ச நிற்போர்`` என மருவி நின்றது. செஞ்செவே நிற்றல், மிக நேர்மையாக நிற்றல்.