ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பதிகங்கள்

Photo

போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை.
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் குங்கம ழாக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்றனைக் கூறிநின் றுய்மினே.

English Meaning:
Praise Lord and Spurn Death

Praise the benevolent Lord,
He of Mount Kailas;
He as central stood,
In cardinal directions four, our Lord;
With the precious body
That Prana`s vital breath holds
Praise the Lord and be redeemed,
The Lord,
Who with His Feet the God of Death spurned.
Tamil Meaning:
இனி இங்கு நின்றும் இவ்வதிகாரத்தில் மேல் `` ஒருவனே தேவனும்` என ஒருதலைப் பட வலியுறுத்தி உணர்த்தி யருளிய, `சிவபிரானுக்கு ஆட்செய்வதையே நும் கடமையாகக் கொண்டு ஒழுகிப் பயன் பெறுங்கள்` என்பதையே பல்லாற்றானும் பன்னிப் பன்னி அறிவுறுத்துகின்றார்.
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
நடுவாதல் - தலைமையிடத்தனாதல். பலபொருட்கும் தலையாதலை `நடுநாயகம்` என்பர். ``திை\\\\\\\\u2970?`` என்றது ஆகுபெயராய் அவற்றில் வாழும் உயிர்களை. ``நடுவாய் நின்றநம்பன்`` என்றதனால், ``அவனே யாவராலும் வணங்கப்படுவோன்`` என்பது குறிப்பு. காற்று, பிராணவாயு. அதுவே உடம்பின் உட்கூறுகள் பலவற்றையும் தக்கவாறு இயைவித்து இயங்கச் செய்தல் பற்றி. ``காற்றிசைக்கும் ஆக்கை`` எனவும், அக்காற்று உள்ள பொழுது மெல்லவும், நீங்கியபின் மிகவும் புலால் நாற்றம் வீசுவது உடம்பு என அதன் இழிவு தோன்ற, ``கமழ் ஆக்கை`` எனவும் கூறினார். நறுமணம் வீசுதலை, `கமழ்தல்` என்றல் மரபாகலின், இங்கு தீ நாற்றம் வீசுதலை, ``கமழ்தல்`` எனக் கூறியது இழித்தற் குறிப்பு. `இசைக்கும் ஆக்கை, கமழ் ஆக்கை`` எனத் தனித் தனி இயைக்க. ``கொண்டு`` என்றது `கருவியாகப் பற்றி` என்றபடி. `அவனைத் துதித்தால் உய்தி பெறுதல் திண்ணம்` என்பதை நிறுவ, ``கூற்றுதைத்தான்றனைக் கூறிநின்று`` என்றார்.