
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பதிகங்கள்

விடுகின்ற சிவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.
English Meaning:
Attaining Celestial StatusWhen in death
Your life breath upward ascends
Course it through central Sushumna
And seek the Feet of the Lord;
Your evil Karmas dire perish;
He of the blemishless fame
Seats you among Beings Immortal.
Tamil Meaning:
எப்பொழுதாயினும் உடம்பை விட்டு நீங்குவதே யன்றி அதில் நிலைத்திராததாகிய உயிர் அவ்வாறு எப்பொழுதாயினும் உடம்பைக் கீழே வீழ்த்தி விட்டுத் தான்மேலே செல்கின்ற பொழுது வாழ்விற்கும், சாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவனது திருவடிகளை நினையுங்கள். நினைந்தால் உங்கள் வினைகள் கெட்டொழிவன. தான் மறைந்திருப்பினும் தனது செயல் எஞ்ஞான்றும் நிகழ்வதால் அதுபற்றி முடிவின்றி வருகின்ற புகழை உடையவனாகிய சிவன் உங்களைத் தேவர்களோடு தேவர்களாய்ச் சேர்ப்பான்.Special Remark:
``விடுகின்ற`` என்றது அதன் இயல்பு கூறிய வாறு, ``சீவனார்`` என்றது நிலைநில்லாமையைக் குறிக்கும் இழிவுக் குறிப்பு. உயிர் உடம்பை இயக்குதலும், இயக்காது விட்டு நீங்குதலும் இல்லாத நேரத்தை ``நடு`` என்றார். நாதன்றன் பாதத்தை முன்பெல்லாம் துணை யாக நினைந்து வந்தவர்கட்கே அந்த நேரத்தில் அவற்றை நினைதல் கூடும் என்க. ``கெடுகின்ற`` என்பது அன்பெறாது வந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. தெளிவு பற்றி எதிர்காலம் ``கெடுகின்ற``, ``இடுகின்றான்`` என நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது. ``இமையவர்`` என்றது அவரது தகுதிக் கேற்ப மால், அயன், இந்திரன் என்னும் இவர் உலகத்தவரையும், சிவலோகத்தவரையும் குறிக்கும். பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``ஏறுடையாய்`` என்னும் மந்திரம் மேல் `மாகேசுர பூசை` அதிகாரத்தில் சொல்லப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage