ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
    தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
    தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
    தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.
  • 10. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
    சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
    சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
    அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே.
  • 11. உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
    பற்றறும் நாதன் அடியில் பணிதலால்
    சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
    தற்பரம் மேவுவோர் சாதக ராமே.
  • 12. எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம்
    வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச்
    சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே
    செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.
  • 13. ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
    தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
    ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
    மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.
  • 14. அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
    சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச்
    சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச்
    சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.
  • 15. ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம்
    பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
    நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
    தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.
  • 16. மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
    ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது
    பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள்
    ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.
  • 17. அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க
    இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே
    அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே
    இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே.
  • 18. ஏறு நெறியே மலத்தை யிரித்தலால்
    ஈறில் உரையால் இருளை அறுத்தலால்
    மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக்
    கூறு பரனே குருவாம் இயம்பிலே.
  • 2. தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
    தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
    தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
    தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.
  • 3. கறுத்த இரும்பே கனகம தானால்
    மறித்திரும் பாகா வகையது போலக்
    குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
    மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
  • 4. பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
    நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்
    ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப்
    பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே.
  • 5. நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற
    நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே
    ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற
    நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே.
  • 6. பரிசன வேதி பரிசித்த எல்லாம்
    வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
    குருபரி சித்த குவலயம் எல்லாம்
    திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.
  • 7. தானே எனநின்ற சற்குரு சந்நிதி
    தானே எனநின்ற தன்மை வெளிப்படின்
    தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல்
    ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.
  • 8. வரும்வழி போம்வழி மாயா வழியே
    கருவழி கண்டவர் காணா வழியைப்
    பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
    குருவழி யேசென்று கூடலும் ஆமே.
  • 9. குருஎன் பவன்வேத ஆகமம் கூறும்
    பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித்
    தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி
    வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே.