ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்
ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப்
பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே.

English Meaning:
Holy Guru Does not Exult in Vain Contentions

He liberates you from Pasas;
He removes your Malas, entire;
He makes you seek the Lord in love;
—Such are the Gurus Holy, blemishless;
They who in contention exult
Are no Gurus enlightened.
Tamil Meaning:
உலகப்பற்றை ஒழித்து வீடுபேற்றில் விருப்பம் கொண்டு தன்னையும், தலைவனாகிய சிவனையும் ஆசிரியர் அருள் மொழியைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுமாற்றால் தனது அறி யாமையைப் போக்கித் தன்னை அடைந்தவரது அறியாமையையும் முற்றப்போக்க வல்லவனே குற்றம் அற்ற உண்மை ஞான குரு ஆவான். அவ்வாறன்றி, அனுபவ ஞானம் இன்றி, நூலறிவு மாத்திரையால் செய்யும் ஆரவாரத்தில் மயங்கித் தானும் அதனையே செய்பவன் உண்மை ஞான குரு ஆகான்.
Special Remark:
``அறிவு`` என்றது, அனுபவ ஞானத்தை. இதனுள் பன்மையாக ஓதுவன பாடம் ஆகாமை அறிக.
இதனாலும் சற்குருவின் இலக்கணம் உடன்பாட்டானும், எதிர்மறையானும் கூறப்பட்டது.