ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

ஏறு நெறியே மலத்தை யிரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலால்
மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக்
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

English Meaning:
Siva is the Supreme Guru

The way of Adhara ascending scorches Malas,
The endless chanting of His name dispels the Darkness (of Ignorance)
Harass the Pasa that the Jiva is heir to,
Thus do thou liberation seek;
The Lord, forsooth, is the Guru Supreme.
Tamil Meaning:
சத்திநிபாதம் படிமுறையால் நாளும் நாளும் மிகுந்து வரும் வகையால் ஆணவத்தைச் சிறிது சிறிதாக முறையே நீக்கி வருதலாலும், முடிவில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும் உப தேச மொழியால் அவ்வாணவங் காரணமாக இருந்து வந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தருதலாலும், பின்னும் பண்டை வாசனையால் பாச உணர்வு தோன்றுமாயின் அதனைத் தோன்றும் பொழுதே பசையின்றி உலர்ந்து கெடும்படி வாட்டி விடுதலாலும், ஆராய்ந்து சொல்லுமிடத்து எல்லா முதன்மையும் உடையவனாக உண்மை நூல்களில் கூறப்படுகின்ற இறைவனே உயிர்கட்கு வீடுபேறு கிடைக்கும்படி குருவாய் வருபவனாவான்.
Special Remark:
இறைவன் தனது அருட்சத்தியால் உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைப் படிப்படியாய் நீக்குதலை,
மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின்
மன்னும் அரனே மலம் துரந்து.
-சிவஞானபோதம், சூ. 11. அதி.2
எனக் கூறியதானானும் உணர்க. மாறுதல் - ஞான நெறியினின்றும் விலகல். ``ஏறு நெறியால்`` எனவும், `ஈறில் உரையால்` எனவும் கூறியவற்றிற்கு ஏற்ப, `தனது அருள் ஞானத் தீயால் வாட்டலால்` என ஏது வருவித்துக் கொள்க.
``தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே``
-சிவப்பிரகாசம், 9-8
எனவும்
`` ... ... ... ... இடை ஏறுவினை
தோன்றில் அருளே சுடும்`` -திருவருட்பயன் - 98.
எனவும் பின்னோர் கூறுதல் காண்க. `இங்குக் கூறப்பட்டன பிறரால் இயல்வன அன்மையின், இறுதிக்கண் கூறிய செயலும் சிவன் செய்யும் செயலேயாம்` என்பது கருத்து. `வீடுறக் குருவாம்` என இயையும்.
இதனால், மேற்கூறிய பொருள் தக்கதோர் ஏதுக்களால் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.