ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி

பதிகங்கள்

Photo

வரும்வழி போம்வழி மாயா வழியே
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலும் ஆமே.

English Meaning:
Follow Holy Guru and Reach the Great Way

The Way of birth,
The Way of death,
The Way of Maya;
The Way they have not seen
Who the birth`s Way saw;
The Great Way that Nandi speaks of
That Way you can reach
If your Holy Guru you follow.
Tamil Meaning:
பிறப்பும், இறப்பும் ஆகிய மாயையின் வேறு பாடுகளே `பிறவி நெறி` எனப்படும். அதனையே கண்டு அவ்வழியே உழல்பவர் கண்டறியாத பெருவழியாக எங்கள் நந்தி பெருமான் தம்மை யடைந்தவர்க்குக் காட்டியருள்கின்ற வீட்டு நெறியை அவரைப்போலும் சற்குரு காட்டும் வழியிலே சென்று பிறரும் பெறுதல் கூடும்.
Special Remark:
`அதனைக் கண்டவர்` என வேறு எடுத்துக் கொண்டு உரைக்க. உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால் `உண்மைக் குரவர் வழியாக யாவரும் வீடுபெறுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.