ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
    மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
    காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
    மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
  • 10. மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
    பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
    கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
    ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
  • 11. காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போல்
    சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
    காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட்
    டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.
  • 12. நாகம் உடல்உரி போலும் நல் அண்டசம்
    ஆகும் நனாவில் கனாமறந் தல்லது
    போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று)
    ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.
  • 13. உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
    கண்டு விடும் சூக்கம் காரண மாச்செலப்
    பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
    பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.
  • 14. தானவ னாகிய தற்பரந் தாங்கினோன்
    ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
    ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
    வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
  • 15. ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ்
    ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
    மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
    மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.
  • 16. விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனு
    எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப
    அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும்
    மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.
  • 17. மலமென் றுடம்பை மதியாத ஊமர்
    தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
    நலமென் றிதனையே நாடி யிருக்கின்
    பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.
  • 18. நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
    மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே
    அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
    மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.
  • 2. அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில்
    சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
    சத்த பரிச ரூப ரசகந்தம்
    புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.
  • 3. எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
    கட்டிய மூன்றும் கரணம தாயிடும்
    ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
    கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.
  • 4. இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்
    வந்தன சூக்க உடலன்று மானது
    தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
    முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.
  • 5. இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
    மருவிய அத்தி வழும்பொடு மச்சை
    பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
    உருவ மலால்உடல் ஒன்றென லாமே?
  • 6. ஆரே அறிவார் அடியின் பெருமையை
    ஆரே அறிவார் அருந்தவம் நின்றது
    ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை
    ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.
  • 7. எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள்
    கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
    புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
    நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.
  • 8. உடம்பிற்குள் நாலுக் குயிராய சீவன்
    ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம்
    கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
    அடங்கியே அற்றதிங் காரறி வாரே.
  • 9. ஆறந்த மாகி நடுவுடன் கூடினால்
    தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும்
    கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே
    ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.