ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.

English Meaning:
God Rejoices in the Body of the Good

Those who are
Of good speech, deed and thought,
In their hearts
The Pure One gently sports;
Those who are
Of evil ears, speech, and mind
Emaciated they live, their faces in hunger drawn.
Tamil Meaning:
நல்ல சொற்களையே பேசுகின்ற வாக்கிலும், நல்ல நினைவுகளையே நினைக்கின்ற மனம் முதலிய அகக்கருவிகளிலும் இறைவன் மெல்ல மெல்ல வெளிப்பட்டு விளையாடுவான். நல்லன அல்லாத சொற்களையே கேட்க விரும்புகின்ற செவியையும், அவ்வாறே, அறியத் தகாத தம் தம் புலன்களையே அறிய விரும்புகின்ற கண் முதலிய ஏனைப் பொறிகளையும், நல்லன அல்லாதவற்றையே நினைக்கின்ற உட்கருவிகளையும் உடைய மக்கள் இவ்வுலகில் வறுமையால் பசி மிக்கவராய் வருந்துவர்.
Special Remark:
`அவர்மறுமையில் நற்பிறப்பையும், பிறப்பற்ற வீட்டையும் அடைதல் எங்ஙனம்` என்பது குறிப்பெச்சம். `உடம்புகளை அருவருத்து நீக்கத் தக்கனவாக உணர்பவரே நல்ல வாக்கு. மனங்களையும், அங்ஙனம் உணராவதவர் தீயனவாகிய வாக்கு மனங்களையும் உடையவராய், அதுவதற்குத் தக்கபயனை அடைவார்கள் என்றபடி. ஆகவே, `வாக்கு மனங்கள் நல்லன வாகும்படி செய்து` அதனால், உடம்புகளின் நீங்கப் பெறுதலே செயற் பாற்று` என்பதாம்.