ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
    பொருவாத புந்தி புலன்போக மேவல்
    உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
    குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. 
  • 10. ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
    பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
    ஓசை அதன்மணம் போல விடுவதோர்
    ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே. 
  • 11. நாத முடிவிலே நல்லாள் இருப்பது
    நாத முடிவில்நல் யோகம் இருப்பது
    நாத முடிவிலே நாட்டம் இருப்பது
    நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே. 
  • 12. உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
    துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
    அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
    கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே. 
  • 13. பள்ளி அறையில் பகலே இருளில்லை
    கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
    ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது
    வெள்ளி அறையில் விடிவில்லை தானே. 
  • 14. கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
    தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
    மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
    பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே. 
  • 15. அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
    அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
    அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
    அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே. 
  • 16. இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
    முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
    துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
    இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே. 
  • 17. முக்குண மூடற வாயுவை மூலத்தே
    சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
    தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
    வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே. 
  • 18. நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
    மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
    கடலித் திருந்து கருதவல் லார்கள்
    சடலத் தலைவனைத் தாமறிந் தாரே. 
  • 19. அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
    செறிவான மாயை சிதைத்தரு ளாலே
    பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
    நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 
  • 2. கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
    பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
    அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
    பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. 
  • 3. ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
    கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
    விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
    பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.
  • 4. ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
    ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
    ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
    ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே. 
  • 5. மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
    சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
    அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
    மனத்து விளக்கது மாயா விளக்கே. 
  • 6. எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
    கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
    உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
    கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
  • 7. நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
    வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
    ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
    தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.
  • 8. நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்
    டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
    துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
    பயனிது காயம் பயமில்லை தானே.
  • 9. மணிகடல் யாஅனை வார்குழல் மேகம்
    அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
    தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
    பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே. 
    (இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)
    கடலொடு மேகங் களிறொடும் ஓசை
    அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
    சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
    திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.