ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

மணிகடல் யாஅனை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே. 
(இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)
கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

English Meaning:
Bell, sea, elephant, flute, cloud
Bee, dragon-fly, conch, drum, and lute
The subtle sounds of these ten are heard
For them alone
Who have stilled their mind in God.
The roar of sea, the thundering of cloud,
The trumpeting of elephant, the euphony of lute,
The music of the orbs
That glow in firmament vast,
The melody of the flute; the resonance of conch,
All these
The yogi true alone hears.
Tamil Meaning:
`மணி நா ஓசை, கடல் ஓசை, யானை பிளிறும் ஒலி, குழல் இசை, மேகத்தின் முழங்கு குரல், வண்டு, தும்பி இவற்றின் ஒலி, சங்கநாதம், முரசின் முழக்கம், யாழ் இை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்னும் ஒலிகள் போன்ற மெல்லிய ஒலிகள் பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர் கட்கல்லது, மற்றையோர்களுக்குக் கேட்டல் கூடாததாகும்.
Special Remark:
எனவே, `கேட்கப்படுதல் தியானத்தில் நிலைத்து நின்றமைக்கு அறிகுறி` என்றவாறாயிற்று. இவ்வோசைகள், பிராண வாயு மேற்கூறிய பத்து நாடிகளிலும் நிற்றலால் உளவாவனவாம். `இந்த இந்த நாடியில் இன்ன இன்னவாறு ஓசை எழும்` என வரை யறுத்தும் சில நூல்கள் கூறும். வார் - நீண்ட. அணி - அழகு. தணிந்து எழுநாதம் - மெல்ல ஒலிக்கின்ற ஓசை. எனவே, ``மேக ஒலி`` என்றது ``இமயத்து ஈண்டு இன்குரல் பயிற்றி`` (புறம். 34) என்றாற்போல மழை பொழிய வரும் மேகம் மெல்லென முழங்கும் முழக்கத்தையாயிற்று. பணிந் தவர் - (தியானத்துள்) அடங்கியவர். ``அல்லது பார்க்க ஒண்ணாதே`` என எதிர்மறையாற் கூறினமையின், ``இஃது அறிகுறி`` என்பது பெறப் பட்டது. படவே, தியான நிலையில் நிற்போர் அவ்வோசையைக் கேட்டலிலும் செல்லுதல் கூடாமை அறிந்துகொள்ளப்படும்.
இதனால், தியான நிலையை உணர்தற்கு ஆவதோர் அடையாளம் கூறப்பட்டது.