
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
பதிகங்கள்

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.
English Meaning:
Uprooting the gunas threeHe who controls breath in Muladhara
And courses it alternate
Through nadi left and right,
In time measure prescribed
Will be immortal made
By Him that is King of Beings Heavenly.
Tamil Meaning:
பிராணாயாமம் முதலியவற்றை முறைப்படி பயில வல்லவர்க்கு அவற்றின் பயனைத் தருபவன், தேவ தேவனாகிய சிவபெருமானே; (அவன் வழி நிற்போராகிய ஏனைய தேவர் அது மாட்டார்.)Special Remark:
`அதனால், அவனைத் தியானிப்பார்க்கல்லது துன்பம் நீங்காது` என்பதாம். முதல் மூன்று அடிகளும் பிராணாயாம முறையை அனுவதித்தவாறு. `முக்குணங்களாகிய பந்தத்தினின்று விடுபடுதற் பொருட்டு மேற்கொள்ளப்படுவதே யோகம்; அப்பயன் சிவயோகத் தாலன்றி எய்தாது` என்பதனை ``முக்குணம் மூடு அற வாயுவைப் பிடித்திட்டு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். `உயிரை அவ்வந் நிலையில் வைக்கும்` என்க.இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage