ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே. 

English Meaning:
Those who realize God,
They alone get qualities godly;
They join the company of the immortals;
Pasa vanishes;
They become immanent in all life
They hear sounds subtlest,
Even as fragrance emanates from a flower.
Tamil Meaning:
தியான யோகத்தால் இறைவனை உணரமாட்டா தவர்க்கு அவனது இயல்பும், தேவர் கூட்டம் முதலிய பிற எல்லாப் பொருள்களும், அவரது உணர்வைத் தம்பால் ஈர்த்து அடக்கி அவரது உணர்வேயாய் நிற்கின்ற, மேற்கூறிய, ``மணி கடல் யானை`` முதலிய ஓசைகளாகவே தோன்றும். அவ்யோகத்தால் அவனை உணர வல்லவர்க்கு அவ்வாறின்றி, ஈசன் இயல்பு முதலிய யாவும், ``அவ் வோசையின் வாசனை`` எனச் சொல்லத்தக்கவாறு, அவ்வோசை நீங்கிய பின்னும் நிலைபெறுவதொரு நுண்ணிய ஓசையாய் விளங்கும்.
Special Remark:
``பாசமாய்`` என ஆக்கச் சொல் வருவிக்க. பாசம், பிறவற்றிற் செல்லாதவாறு தடுத்துத் தம்பால் ஈர்ப்பவை. ``இயங்கும், நிற்கும்`` என்னும் எச்சங்கள், ``ஓை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்னும் ஒரு பெயர் கொண்டன. ``உயிர்`` என்றது, அதன் உணர்வை. ஓசை நிகழ்ச்சியை, ``பாசம்`` என்றதற்கு ஏற்ப, அதன் நீக்கத்தை ``விடுவது`` என்றார். ``விடுவது`` என்றது விட்டபின் நிலை பெறுவதாகிய தன் காரியம் தோன்ற நின்றது. `ஈசனை` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. இதனால், சொல்லியவை, `மணி கடல் யானை முதலிய ஓசையின் வழி இறைவனை உணர்தல் தியான யோகத்தின் முதல் நிலை` என்பதும், `அவை அடங்கப்பெற்று அவனை உணர்தலே அவ் யோகத்தின் முடிவு நிலை` என்பதுமாம். ``ஓசையெலாம் அவற்றால் ஒலிக்கும் திருச் சிலம்பின் ஓை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்றார் திருக்களிற்றுப் படியாரிலும் (வெண்பா, 33).
இதனால், தியான யோகத்தின் முதல் நிலை முடிவு நிலைகள் இவை என்பது கூறப்பட்டது.