ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. இருட்டறை மூலை யிருந்த கிழவி
    குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
    குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
    னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.
  • 10. அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில்
    எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
    உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக்
    கண்ணுற்று நின்ற களியது வாமே.
  • 11. பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
    மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
    குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
    சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.
  • 12. தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
    பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
    ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
    தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.
  • 13. நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
    பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன்
    அணுகிய தொன்றறி யாத ஒருவன்
    அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே.
  • 14. இருவி னைநேரொப்பில் இன்னருட் சத்தி
    குருவென வந்து குணமல நீக்கித்
    தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
    திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
  • 15. இரவும் பகலும் இறந்த இடத்தே
    குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி
    அரவசெய் யாமல் அவளுடன் சேரப்
    பரிவொன்றி யாளும் பராபரை தானே.
  • 16. மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
    சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
    ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்
    தூனை விளக்கி உடனிருந் தானே.
  • 2. தீம்புல னான திசையது சிந்திக்கில்
    ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும்
    தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
    கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.
  • 3. இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
    அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
    மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
    பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.
  • 4. இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
    பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல்
    மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
    அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.
  • 5. மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
    வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக்
    குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
    அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.
  • 6. கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
    கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
    கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
    பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.
  • 7. செய்யன் கரியன் வெளியன் பசியனென்
    றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
    ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
    கைய னிவனென்று காதல்செய் வீரே.
  • 8. எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
    தையலும் தானும் தனிநா யகம்என்பர்
    வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
    கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.
  • 9. கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி
    பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
    வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல்
    நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.