ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.

English Meaning:
Grace Leads Soul Through Successive Stages

She tempted the Soul with guiles,
Took him to Her bosom,
Shook him from stupor,
Dispelled his Karmaic hordes,
Destroyed them to the roots,
Filled him with rapture
Lifted the veil of his Ignorance
Granted many a favour
And then, then, bestowed on him Her Grace that illumines.
Tamil Meaning:
``இருட்டறை மூலை`` என்னும் மந்திரத்திற் கூறியவாறு, ஆன்மாவைத் தன் வயமாக்கிப் பதிந்த சத்தி, பின்பு, ஆன்மாவின் மயக்க உணர்வை முற்றிலும் போக்கி, வினைகளை வெருண்டோட ஓட்டி, அவ்வினைகளால் உளவாகிய அலமரல் நீங்கியதனால் உண்டாகும் அமைதியை உணர்த்தி, சிவனை உணரமாட்டாதிருந்த அந்நிலையை நீக்கி, அவனது அருட்குணங்கள் பலவற்றை உணரப் பண்ணி, அவனது அருளில் விளங்கி நிற்கும் உணர்வைத் தருவாள்.
Special Remark:
அருட் சத்தி தனது முதற் பதிவில் உலகப் பற்று நீங்கச் செய்தபின், ``ஊசல் கயிறற்றால் தாய் தரையே யாந் துணையான்`` 1 என்றவாறு, தனது இரண்டாம் பதிவில் சிவனது திருவடியை நோக்கிச் செலச் செய்தலை இவ்வாறு விரித்தார் என்க. `இரண்டாம் முறையில் சத்தி பிரதிட்டையாய்ப் பதிந்து, மேற்கூறிய நிவிர்த்தி நிலையை நிலை பெறுத்தும்` என்பர் சிவாக்கிர யோகிகள். ``புணர்ந்து`` என்றது, `புணர்ந்தபின்` என்றவாறு. ``குணம்``, இங்கு சிவனுடையன. புரிதலுக்கு, `சத்தி` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், இரண்டாம் சத்திநிபாதத்து இயல்பு கூறப்பட்டது.