ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.

English Meaning:
Wooing of the Soul by the Goddess of Grace
In the corner dark of the Chamber of Primal Stuff
There She was — the Virgin Lady of Grace;
Intent on consorting with the Blind Old Man — the Soul immortal,
She rent his veil of night,
Showered full many a favour,
Wooed with temptations diverse,
And lo! to Her bosom took him,
In wedlock holy.
Tamil Meaning:
இதன் சொற்பொருள் வெளிப்படை.
Special Remark:
இஃது ஒட்டணியாய், ``இருட்டறை`` என்பது ஆணவ பந்தத்தையும் ``மூலையிருந்த`` என்றது, தன் இயல்பு தோன்றாது மறைந்திருந்ததையும், ``கிழவி`` என்றது அநாதியாய அருட் சத்தியை யும், ``குருடு`` என்றது அஞ்ஞானத்தையும்,``கிழவன்`` என்பது ஆன்மாவையும், ``குணம் பல`` என்றது நிலையாமை உணர்வு, துற வுள்ளம் முதலியவற்றையும், ``மருட்டுதல் என்பது மேற்கூறியவாறு உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கு தலையும், ``மணம் புணர்தல்`` என்பது ஆன்ம அறிவிற் பதிதலையும் உணர்த்தி நின்றன. இருட்டறை மூலையிருத்தல் முதலாகக் கூறிய பலவற்றானும் இது சத்திநிபாதத்தின் முதற்படியின் இயல்பாதல் இனிது விளங்கும். ``கிழவி`` என்பதனை, `குமரி` எனவும் பாடம் ஓதுப.
இதனால், சத்திநிபாதம் முதற்கண் நிகழுமாறு கூறப்பட்டது.