ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.

English Meaning:
Vision of Sakti and Siva in Union

Given unto me was to vision the Light
That shone from the Twain in unison;
It was verily the Light Divine of the Ancient One,
In whose matted locks festooned with flowers,
The bees dance drunk with nectar;
They that waited in patience and prayer
They indeed saw Him — their darkness dispelled.
Tamil Meaning:
`சந்திர கலை, சூரியகலை` என்னும் இரு வாயுக்களை முறைப்படி தொடருமாற்றால் அவை ஒரு வழிப்பட்டு முடியும் அவ்விடத்தை அடைந்து, அங்குள்ள ஒளியை நாங்கள் கண்டு பற்றிக்கொண்டோம். அவ்வொளியே முன்னே முன்னே பலர் காண முயன்று காணாது இளைத்த பெரியோன்; எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப்பவன்; (சிவன்) அவன் அவ்விடத்தில் நிலைத்து நின்று தன்னைக் காண்பவர்க்கு அஞ்ஞான இருளைப்போக்குவான்.
Special Remark:
``ஆங்கு`` எனப்பண்டறி சுட்டாற் குறித்து, ஒளிக் காட்சியைக் கூறினமையால் இஃது யோகத்தை உணர்த்தியதாதலின், ``இரண்டு`` என்று இப்பொருட்டாயிற்று. ஆங்கு என்றது, ஆஞ்ஞைத் தானத்தை. மூன்றாம் அடி, `சிவன்` என்பது உணர்த்தி நின்றது. இரண்டாம் சத்திநிபாதம் தனது முதிர்வில் யோகத்தையும் தருதல் கூறியவாறு. இதனுள் ஈற்றடி இனவெதுகை.
இதனால், இரண்டாம் சத்திநிபாதத்தால் யோகமும் உண்டாதல் கூறப்பட்டது.