ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி
அரவசெய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி யாளும் பராபரை தானே.

English Meaning:
How to Win the Goddess of Grace

In the Space Vast where neither night nor day is
The Goddess of Long Tresses dances in rapture;
Think of Her, make no sound
And in silence woo Her;
In endearment all
She draws you unto Her bosom,
And grants you Her favours;
Verily, Verily, She is the Paraparai,
The Power Supreme.
Tamil Meaning:
உயிர் தனு கரணாதிகளைப் பெறாது ஆணவத் தோடு மட்டுமே கூடிச் சடம்போலக் கிடந்த இராக்காலமாகிய கேவல நிலையும், பின் தனு கரணாதிகளைப் பெற்றுப் பிறப்பு இறப்புக்களில் உழன்ற பகற் காலமாகிய சகல நிலையும் பின் ஒருபோதும் உண்டாகாது ஒழிந்த சுத்தநிலையாகிய முத்திக் காலத்திலே, சத்தி யாகிய திருவருள் ஒன்றையே நோக்கித் தற்போதத்தைச் சிறிதும் எழாத படி அடக்கி அவ்வருளோடே ஒன்றியிருக்க, அவ் அருளாகிய சத்தி யும் இவன்பால் இரக்கம் மிக்கவளாய் இவனைத் தன் அடியவனாக ஏற்றுக்கொள்வாள்.
Special Remark:
`அதன்பின் துன்பம் ஏதும் இல்லை` என்பது குறிப் பெச்சம். கேவல சகலங்களை `இரவு, பகல்` என்றல் மெய்ந்நூல் வழக்கு, ``இரவும்பகலும் இறந்த இடம்`` என்றதனால் `அழிப்புக் கேவலம், படைப்புச்சகலம்` என்பனவும், `உறக்கக் கேவலம், விழிப்புச் சகலம்` என்பனவும், `மறப்புக் கேவலம், நினைப்புச் சகலம்` என்பனவுமாகிய இடைநிலை மாற்றங்களும் எய்தாது ஒழிந்த நிலை என்பது போந்தது. இதனை இவ்வாறே,
``இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே``
என்றும்,
``கங்குல் பகல் அற நின்ற எல்லையுளது எது`` 1
என்றும் பிறவிடங்களிலும் குறித்தல் காண்க. குரவம் செய்கின்ற - குராமலர் அழகைச் செய்கின்ற. அரவம் - ஓசை; பேச்சு; என்றது, தற்போதம் தலையெடுத்தலை. `பரிவொன்றிலாளும்` என்பது பாடமன்று.
இதனால், சத்திநிபாத நிலையது அருமை கூறப்பட்டது.