ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே.

English Meaning:
Lord Draws Near When Grace Visits

Seek close,
That soft Flame of Wisdom shall grant you
The peerless gift of Grace;
When you adore Him
Do so, showering blooms at His Feet
As I do,
Then shall He draw near you
Whom nothing can ever near;
He is truly the life pervasive of worlds all.
Tamil Meaning:
தனு காரணங்களின் வழிவருபவற்றுள் ஒன்றையும் நோக்குதல் இல்லாத சத்திநிபாதன், தன்னை யார் அணுகினாலும் அவர்கட்கு முதிர்ந்த ஞானம் ஒன்றையே உணர்த்துவன். சிவனைப் புறத்தில் மலர் தூவி வழிபடினும் படுவான். தான் அடையும் எவ்விடத் திலும் அங்கு உள்ளார்க்கு உயிர்போலச் சிறந்து விளங்குவான்.
Special Remark:
மூன்றாம் அடியை முதலிற் கொள்க. சத்தி நிபாதர் தம்மை அணுகினவர்க்கு ஞானம் ஒன்றையே உணர்த்துவர், ``அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்துதவார் ஆகலான்`` 1 என்பதில் எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது. ``பணிகினும்`` என்பதை ``பணிவன்`` என்பதற்கு முன்னே கூட்டுக. உம்மை, அஃது ஒருதலை யாகாமை குறித்தது. ``உலகெங்கும்`` என்பதின்பின், `அவ்விடத் தார்க்கு` என்பது எஞ்சி நின்றது.
இதனால், தீவர சத்திநிபாதம் வந்தோரது இயல்பு கூறப் பட்டது.
இனி மூன்று மந்திரங்களால் தீவிரதர சத்திநிபாதம் உணர்த்து கின்றார். இஃது `அதிதீவிரம்` எனவும் சொல்லப்படும்.