ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
    கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
    கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
    கண்காணி கண்டார் களவொழிந் தாரே.
  • 10. பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
    பராமய மென்றெண்ணிப் பள்ளி உணரார்
    சுராமய முன்னிய சூழ்வினை யாளர்
    நிராமய மாக நினைப் பொழிந் தாரே.
  • 11. ஒன்றிரண் டாகிநின் றொன்றிஒன் றாயினோர்க்(கு)
    ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
    ஒன்றிரண் டென்றே உரைதரு வோர்க்கெலாம்
    ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.
  • 12. உயிரது நின்றால் உணர்வெங்கு மாகும்
    அயரறி வில்லையால் ஆருடல் வீழும்
    உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
    பயிரும் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.
  • 13. உயிரது வேறாய் உணர்வெங்கு மாகும்
    உயிரை அறியின் உணர்வறி வாகும்
    உயிரன் றுடலை விழுங்கும் உணர்வை
    அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.
  • 14. உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
    நில ஆணி ஐந்தனுள் நேருற நிற்கும்
    சிலஆணி யாகிய தேவர் பிரானைத்
    தலைவாணி செய்வது தன்னை யறிவதே.
  • 15. தானந்த மாமென நின்ற தனிச் சுடர்
    ஊனந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
    தேனந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
    கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.
  • 16. உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
    கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
    நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
    தன்முத லாகிய தத்துவம் ஆமே.
  • 2. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
    பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
    மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
    மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.  
  • 3. பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
    மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது
    வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
    பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.
  • 4. வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை
    நடக்க உறுவரே ஞானம் இலாதார்
    வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
    அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.  
  • 5. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
    காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
    தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவார்கள்
    காயத்துள் நின்ற கருத்தறி யாரே.
  • 6. கண்காணி யாகவே கையகத்தே எழும்
    கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
    கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
    கண்காணி யாகிய காதலன் றானே.
  • 7. கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
    மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை
    தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை
    என்னிது ஈசன் இயல்பறி யாரே.
  • 8. காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி
    காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி
    காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
    காணாது கண்டார் களவொழிந் தாரே.
  • 9. பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
    உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி
    அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
    சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.