ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

உயிரது வேறாய் உணர்வெங்கு மாகும்
உயிரை அறியின் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

English Meaning:
Lord is in Awareness, not in Prana

Prana is from pervasive Awareness apart;
When you know what Prana is,
You shall know what Awareness is,
Awareness is Knowledge, (not Prana),
That pervades the body;
He within that Awareness
Is the Lord Great;
That they know not.
Tamil Meaning:
உயிர் உடம்பு போல அன்றி அதனின் வேறாய் இருத்தலால்தான் அந்த உடம்பு முழுதும் அறிவுத் தன்மை காணப் படுகின்றது. இதனை ஆய்ந்தறியும் அறிவே மெய்யறிவாகும். உயிர் தான் உடம்போடு சேர்ந்த அன்று முதலாக உடம்பு முழுவதையும் தனது அறிவால் அகப்படுத்தி ஆண்டு வருகின்ற அந்தச் செயலை அவ் வுயிர்க்கு உயிராய் நின்று செய்து வருகின்ற ஒரு பெரும் பொருளை அறிபவர் உலகத்தில் ஒரு சிலரே.
Special Remark:
``வேறாய்`` என்பது, `வேறாக` என்பதன் திரிபு. ``அன்று`` என்பதன் பின் `முதலாக` என்பது எஞ்சி நின்றது. உணர்வை அயர்தல், அறிவைச் செயற்படுத்துதல். ஆங்கு - அவ்வாற்றால் என்றது, `அவ்வுண்மையை` என்றபடி. அறியாமை` சிறிதும் அறியாமையேயன்றி, முற்ற அறியாமையையும் குறித்தது; `முற்ற அறியாதவரே கூடா ஒழுக்கத்தினை உடையராகின்றனர் என்பது கருத்து.
இதனால், முன்னை மந்திரத்திற் கூறிய பொருள் வேறோ ராற்றான் வலியுறுத்தப்பட்டது.