ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
    பாவு பரதுரி யத்தினில் தற்பதம்
    மேவு சிவதுரி யத்(து)அசி மெய்ப்பதம்
    ஓவி விடும்தத் துவமசி உண்மையே.
  • 10. உயிர்பரம் ஆக உயர்பர சீவன்
    அரிய பரம்ஆக அச்சிவம் வேதத்
    திரயிலும் சீராம் பராபரன் என்ன
    உரிய உரையற்ற ஓம்மயம் ஆமே.
  • 11. வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
    ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்``
    தாய்நாடி யாதிவாக் காதி கலாதிகள்
    சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.
  • 12. அறிவறி யாமை இரண்டும் அகற்றிச்
    செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
    பிறிவறி யாத பிரான்` என்று பேணார்
    குறியறி யாதவர் கொள்ளறி யாரே.
  • 13. அறிவார் அறிவன அப்பும் அனலும்
    அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
    அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
    அறிவான் அறிந்த அறிவறி யோமே.
  • 14.  அடிதொழ முன்னின் றமரர்கள் அத்தன்
    முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
    படிதொழ நீபண்டு பாவித்த எல்லாம்
    கடிதெழக் காண்என்னும் கண்ணுத லானே.
  • 15. நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
    என்னுளம் வந்(து) `இவன் என் அடியான்` என்று
    பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
    நின்மலன் ஆகென்று நீக்கவல் லானே.
  • 16. துறந்துபுக் குள்ளொளி சோதியைக் கண்டு
    பறந்தஎன் உள்ளம் பணிந்து கிடந்தே
    மறந்தறி யாஎன்னை வானவர் கோனும்
    இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.
  • 17. மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் மெய்தோற்றத்(து)
    ஐவாய அந்தக் கரணம் அகிலமும்
    எவ்வாய் உயிரும் இறைஆட்ட ஆடலால்
    கைவாய் இலாநிறை எங்கும்மெய் கண்டதே.
  • 2. ஆறா றகன்ற அணுத்தொம் பதம் சுத்தம்
    ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
    பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
    வீறான தொந்தத் தசிதத்வ மசியே.
  • 3. துவம்தத்தசியே தொந்தத் தசியும்
    அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன
    தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச்
    சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.
  • 4. துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
    அரிய பரம்என்பர் ஆகார்இ தன்றென்னார்
    உரிய பரம்பர மாம் ஒன் றுதிக்கும்
    அருநிலம் என்பதை யார்அறி வாரே.
  • 5. தொம்பம் தத்பதம் சொல்லும் அசிபதம்
    நம்பிய முத்துரி யத்தும்மேல் நாட ஏ
    யும்பத மும்பத மாகும் `உயுர்பரம்
    செம்பொறா ளான சிவம்`என லாமே.
  • 6. வைத்த துரிய மதில்சொரூ பானந்தத்(து)
    உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை
    மெய்த்த இதயந்து விட்டிடும் மெய்யுணர்
    வைத்த படியே அடைந்துநின் றானே.
  • 7. நனவாதி ஐந்தையும் நாதாதி வைத்துப்
    பினமாம் மலத்தினைப் பின்வைத்துப் பின்சுத்தத்
    தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
    மனவாச கங்கெட்ட மன்னனை நாடே.
  • 8. பூரணி யாவது புறம்பொன் றிலாமையால்
    பேர்அணி யாதது பேச்சொன் றிலாமையால்
    ஓர்அணை யாதது ஒன்றும் இலாமையால்
    காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.
  • 9. `நீஅது ஆனாய்` எனநின்ற பேரூரை
    ஆய்`அது ஆனேன்` என்னச் சமைந்(து) அறச்
    சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரரு
    ளாய்அது வாய்அனந் தானந்தி யாமே.