ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்

பதிகங்கள்

Photo

 அடிதொழ முன்னின் றமரர்கள் அத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த எல்லாம்
கடிதெழக் காண்என்னும் கண்ணுத லானே.

English Meaning:
Result of Prayer and Penance

Head bowed low,
I worshipped at the Feet
Of the Lord of Celestials;
Lo! the Lord stepped forward and said;
``You shall now see the result
Of all your prayer and penance,
Of yore performed``
And so blessed me,
He the Lord of Fore-head Eye.
Tamil Meaning:
சிவபெருமானைத் தேவர்கள் அவன் திருமுன் நின்று அவனது திருவடிகளைத் தலை வணங்கிப் பணிய, அவனும் அவர்கட்கு முன்னின்று அவர்கள் வேண்டுவனவற்றை அளித் தருளுவன். இனி, உலகமெல்லாம் `ஞானி` என்று வணங்கும்படி நிற்கின்ற உனக்கு அவன், நீ முன்பு யோக பாவனையில் பாவனை யாகப் பாவித்தவைகளையெல்லாம் இப்பொழுது விரைவில் உண்மை -யாய் விளங்கக் கண்டு இன்புறுவாயாக` என்று அருள்புரிவான்.
Special Remark:
`போகம், மோட்சம்` என்பவற்றில் வேண்டுவார் வேண்டுவதைத் தருபவன் சிவன், அவன்பால் நீ மோட்சத்தையே வேண்டுவாயாக என மாணாக்கனுக்கு அறிவுறுத்தவாறு. `அத்தனை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்டது. `முடிதொழ` என்றது, முன்பு ``அடிதொழ`` எனப் பொதுவாகக் கூறியதைச் சிறப்பாக விளக்கிக் கூறியவாறு. ``ஈசன் கண்ணுதலான்`` என்பன சுட்டுப் பெயரளவாய் நின்றன. `படிதொழப் பாவித்த` என இயையும். `கடி தொழ` என்து பாடமன்று.
இதனால், `சிவன் மோட்சம் தருபவனல்லன்` எனவும் `மோட்சமே தருவான்; போகம் தாரான்` எனவும் கூறிப் பிணங்கு வோரையெல்லாம் மறுத்து `அனைத்தும் தருவான்` என்பதும், `ஆயினும் உயர்ந்தோர் அவன்பால் மோட்சத்தையே வேண்டி மேற் கூறிய நெறியில் நிற்பார்`` என்பதும் கூறப்பட்டன.