ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்

பதிகங்கள்

Photo

துவம்தத்தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன
தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச்
சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.

English Meaning:
Tat-Tvam-Asi of Vedanta is the Same as
Tvam-Tat-Asi of Siddhanta-Vedanta

Tvam-Tat-Asi is the same as Thvamtatasi
The one comes conjoined as the other
The holy concept of (You-being-I) Tat-Tvam-Asi belongs to Vedanta;
The concept of I-Siva-becoming (Thvamtatasi) is
Siddhanta-Vedanta.
Tamil Meaning:
`துவம் தத் அஸி` என்பதே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. அவை இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, பொருள்கோள் முறையில் ஒன்றாய் இயைகின்ற இயை பினால் ஒன்றேயாகின்றன. இனி, வேதாந்தத்தில் பெரிதும் பயின்று வருகின்ற `தத்துவமசி` என்னும் மகாவாக்கியம் வேதாந்தம் சீவன் சிவமாதலையே குறிப்பது. ஆகிவே, அதனை, சித்தாந்த மகா வாக்கியம்` என்றும் சொல்லலாம், `இல்லை, வேதாந்த மகாவாக்கியந் தான்` என்றும் சொல்லலாம்.
Special Remark:
`எப்படிச் சொல்லினும் பொருள் ஒன்றே` என்து கருத்து முதல் அடி அனுவாதம். மன்னா - மன்னி, அந்நுவயம் - பொருள் கோள் முறை. தவ உறுதல் - பயின்று வருதல் ``அதுவும்`` என்னும் உம்மை சிறப்பு. சித்தாந்த வேதாந்தம் உம்மைத்தொகை. சித்தாந்த மகாவாக்கியம், `சிவத்துவமசி` என்பது, திருவைந்தெழுத்தேயும் இப்பொருளைப் பயக்கும்.
இதனால், `மகாவாக்கியங்களில் சொல்வேற்றுமை பற்றி மலைதல் வேண்டா; அவையெல்லாம் பொருளால் ஒன்றே` என்பது கூறப்பட்டது.