ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
    அமைய வகுத்த அனாதி புராணன்
    சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
    அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.
  • 10. ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
    வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி
    பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
    தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.
  • 11. சைவ சமயத் தனிநா யகன்நந்தி
    உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
    தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
    வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.
  • 12. இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும்
    பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி
    எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்!
    ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.
  • 13. ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க்
    காமே பிரானுக் கதோமுகம் ஆறுள
    தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
    நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.
  • 14. ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ்
    வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
    பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
    ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.
  • 15. ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
    ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி
    ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
    ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.
  • 16. அறியஒண் ணாத உடம்பின் பயனை
    அறியஒண் ணாத அறுவகை ஆக்கி
    அறியஒண் ணாத அறுவகைக் கோசத்
    தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.
  • 2. ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள
    என்றது போலும் இருமுச் சமயமும்
    நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள்
    குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.
  • 3. சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை
    உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
    எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
    வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.
  • 4. சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
    பவனவன் வைத்த பழவழி நாடி
    இவனவன் என்ப தறியவல் லார்கட்
    கவனவ னங்குள தாங்கட னாமே.
  • 5. ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
    போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங்
    காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும்
    போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.
  • 6. அரனெறி யாவ தறிந்தேனும் நானும்
    சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
    உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும்
    தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.
  • 7. தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
    பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
    ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
    போந்து புனைந்து புணர்நெறி ஆமே.
  • 8. ஈரும் மனத்தை இண்டற வீசும் இய்
    யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே
    வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத்
    தூரும் சுடரொளி தோன்றலு மாமே.
  • 9. மினற்குறி யாளனை வேதியர் வேதத்
    தனற்குறி யாளனை ஆதிப் பிரானை
    நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
    அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.