ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பதிகங்கள்

Photo

ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள
என்றது போலும் இருமுச் சமயமும்
நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.

English Meaning:
All Faiths Lead but to Lord

One, the Great City,
Six, the roads that lead to it;
Thus are Faiths Six;
They that contend, ``This true; That false``
Are like the dog that in ire barks
To its own echo at hill side.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
``உள`` என்பதனை, ``இருமுச் சமயமும்`` என்பதன் பின்னும் கூட்டுக. மூன்றாம் அடியாற்போந்த பொருள், `கலாய்ப்பவர்` என்பது. ஆதர்கள் - அறிவில்லாதவர்கள். `மலையைப் பார்த்து நாய் குரைத்தல் போல` என்பது பழமொழி. ``ஒத்தார்கள்`` என்றது, அகச் சமயத்தவருள் ஒரு சமயத்துள் நின்றுபிற சமயங்களை இகழ்பவரை. `அங்ஙனம் இகழ்தல் அவையும் பிறவாற்றால் உண்மையை உணர் தற்கு வழியாதலை அறியாமையாலாம்` என்பது கருத்து. இறுதியிற் போந்த உவமை, அகச் சமயிகளிடைப் பூசல் விளைப்பார்க்கே ஆதல், வெளிப்படை. இதன் முதல் அடியோடு ஒப்ப,
``சுத்தவடி வியல்பாக உடைய சோதி
சொல்லியஆ கமங்களெலாம் சூழப் போயும்
ஒருபதிக்குப் பலநெறிகள் உளவா னாற்போல்``1
எனச் சிவஞானசித்தியும் கூறுதல் காண்க. `ஒரு பதிபோல்வது` கருத்து என்பதும், `பல நெறிகள் போல்வன சொற்கள் என்பதும் சித்தியுள் தோன்றுதல் காண்க.
இதனால், அகச் சமயங்கள் சொல் வகையாலும், செயல்வகை யாலும் வேறுபடினும், கருத்து வகையால் ஒன்றாதலைக் கூறி, அஃது அறியாது அவற்றிடை நிற்போர் தம்மிடைக் கலாய்த்தலும், சைவரை இகழ்தலும் கூடாமை கூறப்பட்டது.