ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பதிகங்கள்

Photo

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங்
காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.

English Meaning:
The True Path is Through Kundalini

The Six Faiths that profess the means to Becoming
Are by themselves but blind alleys all;
No good comes by following them alone;
The true path of Becoming for all life to pursue
Is but the path of divine Kundalini Sakti,
The blossom-vine that through Six centres courses.
Tamil Meaning:
பொருந்தும் வழியையே கூறுகின்ற அகச் சமயங்கள் ஆறுக்கும் தலைவனாகிய சிவபெருமானை நேரே சென்று அடைதற்குப் புண்ணியம் தவிர வேறில்லை. சைவத்தில் நிற்பவர்க்கேயன்றி பிறசமயங்களில் நிற்கும் அனைத்துயிர்கட்கும் மேற்செல்லும் வழியாகிய அந்தச் சிவசத்தியாகிய முதல்வியே அவ்வுயிர்கட்கு அச்சமயங்களைப் பொருந்தும் வழியாகக் கூட்டு விப்பாள்.
Special Remark:
``சமயாதி`` நான்காவதன்தொகை `ஆதிக்கு` என்னும் நான்காவதை ஏழாவதாகத் திரித்துக்கொள்க `ஆம் ஆம்` என்னும் அடுக்கு, `அவ்வவற்றிகுப் பொருந்துகின்ற, என்னும் பொருட்டு. வழி ஆக்கும் - வழியாகக் கூட்டுவிக்கும். ``ஆமாம் வழி ஆக்கும்`` என்பதனை இறுதியிற் கூட்டி உரைக்க. `போமாறாகிய கொடி` என்க. ஆதாரம் - அனைத்திற்கும்` நிலைக்களம். அங்ஙனம் ஆவது சிவ சத்தியே யாதல் அறிக.
இதனால், `அகச் சமயங்களும் சிவசத்தியின் செயலால் அமைந்தனவே` என்பது கூறப்பட்டது.