ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
    குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை
    அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
    செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.
  • 10. மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
    கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப்
    பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு)
    அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.
  • 11. உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
    மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப்
    பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
    ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.
  • 12.  வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
    தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து)
    அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில்
    செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே
  • 13. மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
    துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
    தியக்கம் செய்யாதே சிவன்எம் பெருமான்
    உயப்போ கெனமனம் ஒன்றுவித் தானே.
  • 14. மனமது தானே நினையவல் லாருக்(கு)
    இனம்எனக் கூறும் இருங்காயம் ஏவல்
    தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
    புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.
  • 2. எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டே
    எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை
    எல்லாம் அறியும் அறினை `நான்` என்னில்
    எல்லாம் அறிந்த இறையென லாமே.
  • 3. தானே உலகின் தலைவன் எனத்தகும்
    தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
    வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
    ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.
  • 4. அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
    இருளற்ற சிந்தை இறைவனை நாடி
    மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
    பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.
  • 5. மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
    பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
    உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
    மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.
  • 6. மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
    பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக்
    கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
    கைகலந் தார்க்கே கருத்துற லாமே.
  • 7. எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன்
    மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும்
    பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில்
    ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.
  • 8. எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள்
    உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி
    பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின்
    மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.
  • 9. கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை
    மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
    பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப்
    பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.