ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 38. வாய்மை

பதிகங்கள்

Photo

 வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து)
அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே

English Meaning:
Lord is a Delicious Fruit Within

There is a Fruit Delicious,
From fragrant flower within it ripens;
The birds within the Self
Hinder you from reaching it;
Shoot your arrow,
And drive them away;
Then can you reach Siva State
Lustrous as Pure Red Gold.
Tamil Meaning:
நறுமணம் மிக்க மலர்களினின்றும் காய்த்துப் பழுத்த நல்ல பழம் ஒன்று தோட்டத்தில் உள்ளது. அதனை தோட்டத்தில் விளைவித்தவன் உண்ணாதபடி ஒரு கொடிய பறவை வந்து கொத்தித் தின்கின்றது. அஃது அவ்வாறு செய்யாதபடி வில்லில் அம்பைத் தொடுத்து எய்து பறந்தோடும்படி ஓட்டினால் சிவந்த பொன்போலும் கிடைத்தற்கரிய சிவகதியைச் சென்று அடையலாம்.
Special Remark:
முன் மூன்று அடிகள் ஒட்டணியாய் நின்றன. மலர்கள், ஆறு ஆதாரங்கள். மணம் - தெய்வமணம். பல மலர்கள் பூத்துப் பொலிய, அவற்றின் பயனாக ஒருகாயே காய்த்துப் பழுத்த அரிய பழம் சிவம் `வம்பு மலரிற் பழுத்த பழம்` என மாற்றியுரைக்க தோட்டம் - உடம்பு. தோட்டத்தை உடையவனாய், அதில் பயிர் செய்பவன் யோகி. பறவை - பொய்ம்மை. சிவத்தை மறைத்து விடுவதால், அதனை அப்பழத்தை உண்ணும் பறவையாகக் கூறினார். எய்தற்குரிய `வில், நாண், அம்பு` இவை என்பது மேலே கூறப்பட்டது. 3
இதனால், பொய்மை அகலப்போக்குதற்குப் பிரணவயோகம் சிறந்ததாதல் கூறப்பட்டது.