ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 38. வாய்மை

பதிகங்கள்

Photo

கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை
மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப்
பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.

English Meaning:
Lord is the Refuge only of the Truthful

He who entered my Sushumna Nadi,
He who is in my thoughts ever—Nandi
He who is in my body,
He the source of Vedas all
He the Holy One,
That reveals not to men untrue;
He who is the Refuge,
Of only those who their falsehood shed.
Tamil Meaning:
(இவ்வதிகாரத்துள் முன்பே இரு மந்திரங்களில் கூறியபடி) வாய்மையாளரையே விரும்புதலும்` பொய்ம்மையாளரை வெறுத்தலும் உடையவனும், எல்லா உயிர் உள்ளங்களிலும் உள்ளவனும், வேத முதல்வனும் ஆகிய சிவபெருமானைப் பொய்யை யொழித்து, மெய்யாகப் பற்றினவர்க்கே அவன் புகலிடமாவான். (``மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து * செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே`` என அருளிச்செய்தார் ஆளுடைய பிள்ளையாரும்).
Special Remark:
இரண்டன் உருபுகளை, `ஒழிந்து பற்றினார்க்கே` என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், பொய்யாமையானே முன் மந்திரத்திற் சொல்லிய திருவருள் கிடைத்தல் கூறப்பட்டது.