ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆதியோ டந்தம் இலாத பராபரம்
    போதம தாகப் புணரும் பராபரை
    சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
    தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.
  • 10. ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
    பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
    வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
    ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. 
  • 11. காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
    நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
    பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
    ஆரண மாய்உல காயமர்ந் தானே. 
  • 12. பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
    நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு
    வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
    வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. 
  • 13. போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
    தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து
    மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
    தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. 
  • 14. நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
    ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
    முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
    நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. 
  • 15. ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன்
    வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
    போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
    ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. 
  • 16. ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
    இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
    பருவங்கள் தோறும் பயன்பல வான
    திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. 
  • 17. புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
    புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
    புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
    புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே. 
  • 18. ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங்
    காணியர் காரண ஈசர் கடைமுறை
    பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
    தாணவம் நீங்கா தவரென லாகுமே. 
  • 19. உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
    மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து
    பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால்
    துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே. 
  • 2. நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
    தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
    பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
    வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே. 
  • 20. ஆகாய மாதி சதாசிவ ராதியென்
    போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
    மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
    ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே. 
  • 21. அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
    அளியார் திரிபுரை யாம் அவள் தானே
    அளியார் சதாசிவ மாகி அமைவாள்
    அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே. 
  • 22. வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை
    காரணி காரிய மாகக் கலந்தவள்
    வாரணி ஆரணி வானவர் மோகினி
    பூரணி போதாதி போதமு மாமே. 
  • 23. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
    சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
    மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
    என்றிவ ராக இசைந்திருந் தானே. 
  • 24. ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
    ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
    ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
    ஒருவனு மேஉல கோடுயிர் தானே. 
  • 25. செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
    மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
    கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
    ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே. 
  • 26. தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
    கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
    ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
    நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே. 
  • 27. ஓராய மேஉல கேழும் படைப்பதும்
    ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
    ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
    ஓராய மேஉல கோடுயிர் தானே. 
  • 28. நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
    கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
    ஏது பணியென் றிசையும் இருவருக்
    காதி இவனே அருளுகின் றானே. 
  • 29. அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
    மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
    பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
    கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. 
  • 3. இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
    கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
    வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
    சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. 
  • 30. ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
    போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
    வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
    ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 
  • 4. தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
    ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
    பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
    சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.
  • 5. மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
    கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
    தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
    பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
  • 6. புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
    புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
    புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
    புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. 
  • 7. புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
    தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
    கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
    மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.
  • 8. நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
    காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை
    ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி
    நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. 
  • 9. உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
    அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்
    கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
    பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.