ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
    பழுதறி யாத பரம குருவை
    வழியறி வார்நல் வழியறி வாளர்
    அழிவறி வார்மற்றை யல்லா தாரே.
  • 10. சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல
    ஆராத காதல் குருபரன் பால் ஆகச்
    சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன்
    ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.
  • 11. உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
    இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
    குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
    டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.
  • 12. இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக்
    குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
    சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
    டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
  • 13. வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
    வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து
    வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே
    தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.
  • 14. சற்குணம் வாய்மை தாயவிவே கம்தண்மை
    சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
    சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல்
    அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.
  • 2. பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
    அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
    சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
    உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.
  • 3. பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
    விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
    சிதைக்கின்ற சிந்தையைச் செய்வே நிறுத்தி
    இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.
  • 4. கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
    உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
    எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
    தெள்ளி அறியச் சிவபதந் தானே.
  • 5. சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
    ஓதிய நாளே உணர்வது தான் என்று
    நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது.
    ஆதியும் ஏதும் அறியகில் லானே.
  • 6. தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
    எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
    விழலார் விறலாம் வினையது போகக்
    கழலார் திருவடி கண்டரு ளாமே.
  • 7. சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி
    ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
    ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
    சாத்தவல் லானவன் சற்சீட னாமே.
  • 8. சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
    சித்தம் உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
    பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்த
    சத்தியின் இச்சை தகுவோன் சற் சீடனே.
  • 9. அடிவைத் தருளுதி ஆசான் இன்றென்னா
    அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
    அடிவைத்த காய அருட்சத்தி யாலே
    அடிபெற்ற ஞானத்தன் ஆசற் றுளோனே.