ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்

பதிகங்கள்

Photo

தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தாரே.

English Meaning:
They who find the Path

Scriptures to guide them,
The Disciples Fit
Find the blemishless Guru;
They know their job and so find the Path;
The rest are to destruction destined.
Tamil Meaning:
குற்றத்தைப் பொருந்துதல் சிறிதும் அறியாத மேலான் ஆசிரியரை நூல்முறை வழியே வழிபட்டு அவர்பால் உய்யும் வழியை அறிபவரே நல்வழியை அறிபவராவர். அல்லாதா ரெல்லாம் ஏனைக்கெடும் வழியை அறிபவரேயாவர்.
Special Remark:
இரண்டாம் அடியை முதலிற் கொண்டும், முதலடியை மொழி மாற்றியும் உரைக்க. ஈற்றடியிலும், `அல்லாதவர் மற்றை அழிவறிவார்` எனக் கூட்டுக. குற்றம், காம வெகுளி மயக்கங்கள் அவற்றைச் சிறிதும் பொருந்தாமை சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகுதலால் அமைவதாகலின், அவரே மேலான ஆசிரியாரதல் அறிய `அத்தகையோரை அறிந்து அடைந்து வழிபடப்பெறுதல் பக்குவிகட்கேகூடும்` என்பது, `அறிவாளர்` எனவும், ``அறிவார்`` எனவும் மறித்து மறுத்து வலியுறுத்தவாற்றால் பெறப்பட்டது.
இதனால், `அதிபக்குவரே பரம ஆசிரியரை அடைந்து வழிபட்டு உய்வர் என்பது கூறப்பட்டது.