ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்

பதிகங்கள்

Photo

உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.

English Meaning:
Rules of Instruction

Impart divine knowledge only to those fully ripe to receive it,
Taking the disciple gently to the limits of the Infinite Vast;
You facing east or south, your disciple facing west or north
Thus instruct, the Sakti of Lord centred in mind.
Tamil Meaning:
உண்மை ஞானாசிரியனாயுள்ளவன் சிவ ஞானத்தை உணரத்தத்தக்க அதிபர்குவர்கட்கே அதனை முன்பு கேள்வியளவான் உணர்த்தி, அதன்பின் அவர்கள் அதனைச் சிந்தித்துத் தெளிந்த தெளிவு நிலையில் சிவனது வியாபகத்துள் அவர்களை வியாப்பியமாகச் செய்தலாகிய நிட்டையை எய்துவித்து, அந்நிட்டை நிலைபெற்ற வழி கிழக்கு முதலிய திசைப் பாகுபாடுகளுள் யாதும் இல்லாதவாறு சிவனது வியாபகத்தை முற்றுமாகத் தலைப் படுவிப்பன். அங்ஙனம் அச்செயல் அனைத்தையும் அவன் செய்வது, அனைத் துயிர்களையும் உடைய அருட் சத்தியைத் தியானித்தே.
Special Remark:
மின் - மின்போலும் பெண். `மின்னாகிய ஆவுடையாள்` என்க. அவளை உன்னுதலாவது. தனது ஞானேச் சாக்கிரியைகள் யாவும் அவளாகவே நிற்றல். `ஆவுடையான்` எனப் பாடம் ஓதுவோர், `மின்னையுடைய ஆவுடையான்` என உரைப்பர். `ஆவுடையாள்` என்பதே வழக்கின்கண் மரபுப்பெயராய் வழங்கும். எவ்வாறு ஓதினும், அத்தொடர் சிவோகம் பாவனையைக் குறிப்பதே. துரியமாகிய அருள் நிலையுள் நிறுத்தலை, ``எல்லையுள் இட்டு`` எனவும் அதீதமாகிய ஆனந்தநிலையுள் நிறுத்தலை, `திசைப் பாகு பாடு நீக்கி` எனவும் கூறினார். குணக்கு - கிழக்கு. உத்தரம் - வடக்கு. பச்சிமம் - மேற்கு. கொண்டு - தான் கைக்கொண்டு. என்றது `அவனுக்குத் தோன்றாவகை செய்து` என்றதாம்.
இதனால், அதிபக்குவம் உடையார் குருவருளால் முத்தி நிலையை விரையப் பெறுதல் கூறப்பட்டது. இதனானே, ஞானாசிரியராவார். அதிபக்குவர்க்கு விரைய அருளல் வேண்டும் என்பதும் குறிப்பாற் பெறப்பட்டது.