ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்

பதிகங்கள்

Photo

சற்குணம் வாய்மை தாயவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

English Meaning:
Good Disciple follows Guru like a shadow

O! disciple true!
In virtue, truth, compassion, discrimination and love
You pursue the Holy Feet of Guru true
Constant as unto a shadow;
You then gain the nectar of Finite Jnana its crystal clarity,
And witness the many miracles it brings in train.
Tamil Meaning:
சற்குணம் முதல் அற்புதம் ஈறாக உள்ள ஏழியல்பும் உடையவனே சற்சீடனாவான்.
Special Remark:
சற்குணம் - நற்பண்பு. அது மனம், மொழி, மெய் என்னும் மூன்றனுள் யாதொன்றானும் பிறவுயிர்க்குத் தீங்கு தேடாது இயன்ற அளவு நன்மை தேடுதல். விவேகம் - நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து, தீமையை விலக்கி, நன்மையைக் கொள்ளல். தண்மை - யாவர் மாட்டும். எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடைமை. சிற்பர ஞானம் - பேறறிவாகிய பரம்பொருளை அறியும் அறிவு. அதனைத் தெளிதற் பொருட்டு அதற்குரிய வாற்றால் ஓர்தலாவது. நூல்களாலும், பொருந்துமாற்றானும் ஆராய்ந்து ஒருமைபெற உணர்தல். அற்புதம் தோன்றலாவது! உலகியலில் நின்றபொழுது தோன்றாத புதுமைகள் தோன்றப் பெறுதல். அஃதாவது, ``பேரா, ஒழியாப், பிரிவில்லா, மறவா, நினையா, அளவிலா, மாளா இன்ப மாக்கடல்`` l போலப் புதிது புதிதாக எல்லையின்றி விளையக் காண்டல். `சற்சீடன்கண் ஆகும்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `சற்சீடன்கண் ஆகும்` எனவே, `அது` பக்குவத்தின் பயன்` என்றதாயிற்று. `சற்சீடற்கே` எனப் பாடம் ஓதலுமாம்.b
இதனால், பக்குவ மிகுதியது பெரும்பயன் கூறி முடிக்கப்பட்டது.