ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
    சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
    சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
    சித்தம் இறையே சிவகுரு வாமே.
  • 10. சித்த மியாவையும் சிந்தித் திருந்திடும்
    அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
    சித்த மியாவையும் திண்சிவ மானக்கால்
    அத்தனும் அவ்விடத் தேஅமர்ந் தானே.
  • 11. தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
    கோனந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
    வானந்தி என்று மகிழும் ஒருவற்குத்
    தானந்தி அங்கித் தனிச்சுட ராகுமே.
  • 12. திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
    மருளா அருளும் மயக்கறும் வாய்மைப்
    பொருளாய வேதாந்த போதமும் நாதன்
    உருவாய் வராவிடில் ஓரவொண் ணாதே.
  • 13. பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
    சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
    முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
    சத்தி அருள்தரின் தான்எளி தாமே.
  • 14. பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
    முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
    தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
    மன்னெய்த வைத்த மனமது தானே.
  • 15.  சிவமான ஞானந் தெளியஒண் சித்தி
    சிவமான ஞானந் தெளியஒண் முத்தி
    சிவமான ஞானம் சிவபர தேகம்
    சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.
  • 16. அறிந்துணர்ந தேன்இவ் வகலிடம் முற்றும்
    செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
    மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
    பிறிந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.
    16

    தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
    இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
    பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாம்
    கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.
  • 2. பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
    நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
    கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
    தாசற்ற சற்குரு அப்பர மாமே.
  • 3. சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
    சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
    சத்தியும் மந்திர சாதக போதமும்
    பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.
  • 4. எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
    நல்லார்கள் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
    எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால்
    சொல்லார்ந்த சற்குரு சுத்த சிவமே.
  • 5. தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
    யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே
    மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
    யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.
  • 6. சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
    தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
    பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
    அத்தன் இவனென் றடிபணி வாரே.
  • 7. உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பால்
    திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
    வண்மையும் எட்டெட்டுச் சித்த மயக்கமும்
    அண்ணல் அருளன்றி ஆரறி வாரே.
  • 8. சிவனே சிவஞானி யாதலால் சுத்த
    சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
    நலமான தத்துவ நன்முத்தி நண்ணும்
    பவமான தின்றிப் பரலோக மாமே.
  • 9. குருவே சிவமெனக் கூறினன் நந்தி
    குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
    குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
    குருவே உரையுணர் வற்றதோர் கோவே.