ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

English Meaning:
The Holy Guru is God Himself

He taught me the meekness of Spirit,
Infused in me the light of devotion,
Granted me the Grace of His Feet;
And after interrogation holy, testing me entire,
Revealed to me the Real, the Unreal and Real-Unreal;
Of a certain is Siva-Guru Lord Himself.
Tamil Meaning:
மெய்யாயபொருளிடத்து அன்பை உண்டாக்கி யாவராலும் துதிக்கப்படுகின்ற திருவடியைப் பற்றிக்கொள்ளக் கொடுத்து, தூயசொல்லாலே ஐயமும், திரிபும் ஆய குற்றம் முழுதும் போக நீக்கி, `சத்து, அசத்து, சதசத்து` என்னும் மூவகைப் பொருளின் இயல்பையும் நன்கு உணர உணர்த்தலால், அப்பயனைச் சிவநெறி ஆசிரியர்பால் பெற்ற மாணாக்கர் அனைவரது உள்ளமும் அவரை, `சிவன்` எனவே தெளிவன ஆகின்றன.
Special Remark:
சுத்தம் - வாய்மை, சோதித்தல் - துடைத்தல். சத்து - நிலையுடையது, அசத்து - நிலையில்லாதது, சதசத்து - மேற்கூறிய அவற்றோடு கூடி அது அதுவாய் நிற்பது. இவை முறையே, `பதி, பசு, பாசம்` என்பனவே யாதலும், இவையொழிய அறிதற்கு வேறுபொருள் இன்மையும் அறிக. `இங்குக் கூறியவற்றைச் செய்வது சிவமன்றி வேறின்மையால், சிவகுருவைச் சிவம் என உணர்தலே மெய்யுணர்வாம்` என்றவாறு. எனவே, `மேற்கூறிய செயலைச் செய்யச் சிவமாம் தன்மை எய்தி நின்ற அருளாளரே சிவகுரு ஆவர்` என்பதும் போந்தது. சிவகுரு - சிவத்தை உணர்த்தும் குரு. சித்தம், மாணாக்க ருடையதாதல் ஆற்றலால் விளங்கிற்று. `சிவ குரு இறையே ஆம்` என மொழி மாற்றியுரைக்க. `சிவகுரு இறையே` என்றது. அவ்வாறு உணரும் உணர்வை.