
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
பதிகங்கள்

திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் வராவிடில் ஓரவொண் ணாதே.
English Meaning:
Things That Flow From Guru`s GraceThe Siddhis that are a veritable treasure-trove,
The Mukti that is salvation finite,
The heavenly Grace that vanquishes doubts and fears
And the Jnana that is essence of Vedas
All these,
When the Guru himself imparts not,
Never, never shalt thou learn.
Tamil Meaning:
ஞானமாகிய பேறும், முத்திப்பயனும், மெய்ம் மையை மறவாத அருள்நிலையும், மயக்கம் நீங்குதற்கு ஏதுவாகிய உண்மைப் பொருளையுடைய வேதத்தின் விளக்கமும் சிவனே குருவாய் வாராவிடில் ஒருவற்கும் அறிய இயலாது.Special Remark:
``சீர்மை`` என்றது மெய்மையை. `மருளாதருளும்` என்பது பாடமாயின் மருளாத என்பதன் ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது என்க. ``பொருளாய வேதாந்தம்`` எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார். `வாராவிடில்` என்பது முதல் குறுகி நின்றது.இதனால், சிவன் உருவாய் வரவேண்டுதலின் இன்றியமை யாமை கூறப்பட்டது. ``உண்மையும் பொய்ம்மை`` என்னும் மந்திரம் (1560) குருவருளின் இன்றியமையாமை கூறியது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage