ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

அறிந்துணர்ந தேன்இவ் வகலிடம் முற்றும்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.
16

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

English Meaning:
How Tirumular Ended Birth Cycle

All this space infinite
I cognized and realized;
Adoring with devotion replete
I received His Grace Divine;
Now am I past all remembrance of Ignorance exceeding,
For ever have I bidden adieu to birth recurring.
How Tirumular Met the Lord

He is the Lord of all living creation
Yet naught they know of His State Existent;
I cut the tangle that separated Him from me,
And lo! I met the Lord, the seed of all cauale phenomena.

Tamil Meaning:
குருவின் அருளால் நான் இப்பெரிய பூமி முழுவதன் இயல்பையும் முன்னர்ப் பொதுவாகவும், பின்னர் உண்மை யாகவும் உணர்ந்தேன். அவ்வாறே அவரது அருளையடைந்து சிவனது இயல்பையும் முன்னர்க் கேள்வியளவில் உணர்ந்து, பின்பு நூல்களை ஓதி உணர்ந்து, அவனது திருவருள் கிடைக்கப்பெற்றேன். அதனால், அறிவையிழந்துள்ள உலகவரது வாழ்க்கையில் பற்றுச் சிறிதும் இல்லாதவனானேன். அதனால், இவ்வுடம்பில் இருந்தும் அதனில் நீங்கி நிற்கும் நிலையை உடையவனாயினேன்.
Special Remark:
முதல் அடியால் தத்துவ சுத்தியும், இரண்டாம் அடியால் கேட்டல் சிந்தித்தல்களும், ஏனைய அடிகளால் முறையே தெளிதலும், நிட்டை கூடலும் கூறியவாறு. `குருவருளால்` என்பது அதிகாரத்தால் வந்தது. அதனானே, ``செறிந்து`` என்பது, அவரது அருளையடைத லாயிற்று.
இதனால், சிவகுருவால் அடையும் பயன்கள் பலவும் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டன.
[பதிப்புக்களில் இதன்பின் ``தரிக்கின்ற பல்லுயிர்`` என வரும் மந்திரம் அடுத்த தந்திரத்தில் வருவதாகும்].