ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே.

English Meaning:
When God Reveals Himself

This life of pleasure here below
The Lord for you of yore ordained
That you may the Greater Pleasure attain,
Where your mind reaches to Him in resolve
Then of Himself, He reveals to you.
Tamil Meaning:
இவ்வுடம்பு நீங்கிய பின்பு அடையுமாறு வைத்துள்ள இன்பத் தோற்றத்தை அதற்கு முன்பே அடையும்படிச் செய்த ஞானகுரு எங்கள் சிவபெருமானே. அவன் தன்னை நிலை பேறாக அடைதற்கு வைத்த மனம் அங்ஙனம் அடையும் காலத்துத் தானே குருவாய் வெளிவந்து அருள் செய்வான்.
Special Remark:
``பிறப்பு`` என்றது தோற்றத்தை. ஈற்றடியை மூன்றாம் அடிக்கு முன்னர்க் கூட்டி, `முதல்வன் எம் இறையே` என மாற்றி யுரைக்க. மனம் தன் எய்தும் காலம், பக்குவ காலம். `அம்மன்னை` எனச் சுட்டு வருவித்தும், தொகுக்கப்பட்ட இரண்டாவதை விரித்தும் உரைக்க.
இதனால், இறைவன் குருவாய் வந்தருளும் காலம் இது என்பது கூறப்பட்டது.