ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

English Meaning:
Guru God Identity

Guru is none but Siva — thus spoke Nandi;
Guru is Siva Himself — this they realize not;
Guru will to you Siva be,
And your Guide too;
Guru in truth is Lord,
That surpasses speech and thought, all.
Tamil Meaning:
இதன் பொருளும் வெளிப்படை.
Special Remark:
``நந்தி கூறினன்`` என்றது தாம் அறிந்தவாற்றைக் கூறியது. என்பது - என்று வேதாகமங்களிற் சொல்லப்படும் பொருள். குறித்தல் - உளங் கொள்ளுதல். ``சிவனுமாய் நிற்கும்`` என்றது, சிவனை வேறு வழிபட வேண்டாமைக் கூறியதாம். ``கோனுமாய் நிற்கும்`` என்றதும் இவனது ஆணையே சிவனது ஆணையாக. அதன் வழி நிற்றலே அறமாதலை உணர்த்திற்று. ஈற்றடி, குரு உருவுடைய னாயினும், உருவிலனாகிய சிவனே எனச் சிவனோடு இவனிடை வேற்றுமை இன்மையை வலியுறுத்தவாறு.
இதனால், சிவகுருவை அணுகி நிற்கும் முறை பலவும் தெரித்துக் கூறப்பட்டன.