
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
பதிகங்கள்

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.
English Meaning:
Guru God IdentityGuru is none but Siva — thus spoke Nandi;
Guru is Siva Himself — this they realize not;
Guru will to you Siva be,
And your Guide too;
Guru in truth is Lord,
That surpasses speech and thought, all.
Tamil Meaning:
இதன் பொருளும் வெளிப்படை.Special Remark:
``நந்தி கூறினன்`` என்றது தாம் அறிந்தவாற்றைக் கூறியது. என்பது - என்று வேதாகமங்களிற் சொல்லப்படும் பொருள். குறித்தல் - உளங் கொள்ளுதல். ``சிவனுமாய் நிற்கும்`` என்றது, சிவனை வேறு வழிபட வேண்டாமைக் கூறியதாம். ``கோனுமாய் நிற்கும்`` என்றதும் இவனது ஆணையே சிவனது ஆணையாக. அதன் வழி நிற்றலே அறமாதலை உணர்த்திற்று. ஈற்றடி, குரு உருவுடைய னாயினும், உருவிலனாகிய சிவனே எனச் சிவனோடு இவனிடை வேற்றுமை இன்மையை வலியுறுத்தவாறு.இதனால், சிவகுருவை அணுகி நிற்கும் முறை பலவும் தெரித்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage