ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை

பதிகங்கள்

Photo

போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே யென்றும் எறிமணி தான்அகம்
காற்றின் விளக்கது காயம் மயக்குறல்
மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.

English Meaning:
Witness Dance of Siva

``Hail, my Father! Hail His golden Feet!``
Thus I praised;
And as I praised,
The radiant lamp
Of life within sparkled;
And then I heard the bewitching sound,
That my body in rapture immersed;
And lo! there was His Dance!
Tamil Meaning:
எம் தந்தையாகிய சிவபெருமானது பொன் போலும் சிவந்த திருவடிகளில், அகத்தில் எனது மனத்தையும், புறத்தில் பூக்களையும் ஏற்றி, `போற்றி போற்றி` என்று பலநாளும் துதித்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியின் ஓசை போன்ற ஓர் ஓசை உள்ளத்திலே கேட்டது. உடனே, காற்றின் முன்னே உள்ள விளக்குப் போல்வதாகிய உடம்பு எந்த நேரத்திலும் நீங்குவதாயினும், அஃது என்றும் நீங்காமலே இருப்பது போலக் காட்டி மயக்குகின்ற மயக்கத்தை நீக்கும் உபாயமும் கேட்டது. பின்பு எல்லாவற்றையும் அடக்கி, மேலே வியாபித்துள்ள பரவெளியும் என் கண்முன் காணப்பட்டது.
Special Remark:
``போற்றி என்றேன்`` என்பதை, ``என்றும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``கேட்டது`` என்பதை, முன்னரும், கூட்டி, `அகம் எறிமணி கேட்டது, மாற்றலும் கேட்டது` என்க. மணி, அதன் ஓசையைக் குறித்த ஆகுபெயர். இவ்வோசை யோகத்திற் புலனாகும். ஓசை `விள
க் -காகிய காயம்` என்க. அது பகுதிப் பொருள் விகுதி. ``மாற்றல்`` என்பது ஆகுபெயராய் அதற்குரிய உபாயத்தைக் குறித்தது. உபாயம் கேட்டமை யாவது. அகத்தில் யோகத்தால் புலனாயினமையாம். ``கேட்டது`` எனச் செயப்படுபொருள் வினை முதல் போலக் கூறப் பட்டது. பரவெளி யாவது, திருவருள் அது காணப்பட்டமையாவது தெளிவாக விளங் -கினமை அதனைக் கண்டமை கூறவே அதன்கண் உள்ள சிவத்தைக் கண்டமை கூறவேண்டாவாயிற்று. `நீவிரும் ஏற்றிப் போற்றினால், கேட்டும், கண்டும் பயன் பெறலாம்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `சரியை கிரியா யோகங்களால் சிவனை அடைந்து, அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞ்ஞானிகள் ஆவீராக` என்பது கூறப்பட்டது.