
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
பதிகங்கள்

பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக்
கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.
English Meaning:
Risk to Suddha State Even in TuriyatitaThe hoary scriptures say,
The expanding Space is His Body;
He wears the crescent moon;
Even after reaching the Turiyatita State,
If Jiva a victim to Causal Experiences (of Suddha Maya) falls.
He will Suddha (Pure) per se not be,
If thou ask me.
Tamil Meaning:
முதல் நூல்களாகிய வேதாகமங்கள், சில இடங்களில் சுத்த மாயையை, `சிவனுக்குத் திருமேனி` எனக் கூறும். அஃது உபசாரமே.[``சுத்ததத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவ மாகும்;
நித்தம்என் றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே``*
என்னும் சிவஞான சித்தியையும், அதன் உரையையும் காண்க.] ஏனெனில், சிவன் துரியத்தையும் கடந்து அதீதமூர்த்தி. (நின்மல துரியம் வரையிலே சுத்தமாயை உள்ளது) தத்துவசுத்தி, ஆன்மரூபம் ஆகியவற்றைக் கடந்து ஆன்ம தரிசனத்தைப் பெற்ற ஆன்மாவும் சிவ தரிசன சிவயோகங்களால் ஆன்ம சுத்தியை எய்தாது, காரணோபாதி யாகிய சுத்தமாயையில் இருப்பானாயின் அவனது நிலையை நன்கு ஆராயுமிடத்து அவன் தூய்மை எய்தியவன் ஆகான்.
Special Remark:
``காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால்8 என எதிர்மறை முகத்தானும், உடம்பாட்டு முகத்தானும் தெளிவுபடக் கூறுதலின் சிவனுக்குச் சத்தியே - அருளே திருமேனியாவதல்லது, மாயை திருமேனியாகாது.``அரிதரு கண்ணி யானை ஒருபாக மாக
அருள்கா ரணத்தில் வருவார்``
என்பதே திருமுறை மொழி. இதனை,
``உருஅருள்; குணங்களோடும்,
உணர்வருள் உருவில் தோன்றும்
கருமமும் அருள் அரன்றன்
கரசர ணாதி சாங்கம்
தரும்அருள்; உபாங்க மெல்லாந்
தானருள்; தனக்கொன் றின்றி,
அருளுரு உயிருக் கென்றே
ஆக்கினன்; அசிந்த னன்றே``*
எனச் சாத்திரமும் பலபடியால் வலியுறுத்தி ஓதுதல் காண்க. இங்ஙனமாகவே, சிவன் அசுத்த மாயையைப் போலச் சுத்த மாயையை விலக்காமல் அதிட்டித்து (இடமாகக் கொண்டு) நிற்றல் பற்றிச் சில இடங்களில் அதனைச் சிவனுக்குத் திருமேனியாக உபசரித்துக் கூறும். ஆகவே, சிவனுக்கு உண்மையில் திருமேனியாய் அமைவது அவனது சத்தியே என்பதாம்.
``ஆகாச சரீரம் பிரஹ்ம``
என்னும் உபநிடத மொழியில் ``ஆகாசம்`` என்பதும் சிதாகாசமாகிய சத்தி என்பதே சித்தாந்தம். ``பர வான்`` என்றது இங்குச் சுத்த மாயையை. காரணோபாதியாவதும் அதுவே. ``பரன்`` என்றது, தத்துவங்கடந்து தன்னைத்தான் கண்டமையால் பாசங்களின் நீங்கினவனாகிய ஆன்மாவை. ``பரனும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், முன் மந்திரத்தில், ``சுந்தரச் சோதிபுக்கு அப்புறமாய் அறுதல்` எனக் கூறியது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage