ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்

பதிகங்கள்

Photo

தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி
சிற்பரந் தானே செகம்உண்ணும் போதமும்
தொற்பதந் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்(கு)
அப்புறம் அற்றதிங் கொப்பில்லை தானே.

English Meaning:
Lord is Splendorous Light in the Space Beyond

The Primal Lord that is Tat-Para
Is Light Resplendent
He is Chit-Para, (Divine Jnana filled)
He is the Divine Sentience
That engrosses universe;
Enter in the Splendorous Light,
In the Space that is beyond words,
No more is there anything to compare.
Tamil Meaning:
`தத்` பதப் பொருளாகிய பதி, தன்னிலையில், நிலையான ஒப்பற்ற, முதன்மை வாய்ந்த பேரறிவே எனினும், அதுவே உயிர்களை நோக்கி இயங்கும் பொதுநிலையில் உயிர்களை உலகத்தை நுகரும்படி செய்கின்ற பாச அறிவாய் நிற்கும். (`திரோதான சத்தியாய் நிற்கும்` என்றாம். ) அந்தப் பாச அறிவால் உயிர் உலகத்தை நுகர்ந்து வருங்காலத்தில் அந்தப் பாச அறிவும், அதன் அறிவாகிய பசு அறிவும் நீங்கப் பெற்ற பொழுது, முன்சொன்ன பேரொளியிற்கலந்து, அதற்கு அப்பாலும்போய், முன்னை நிலையெல்லாம் நீங்கப்பெற்று நிற்கும். அப்பொழுது அதற்கு ஒத்ததும், உயர்ந்ததும் இல்லாத ஓர் உயர்வை அஃது அடையும்.
Special Remark:
`அச் சிற்பரம்` எனச் சுட்டு வருவிக்க. ``போதம்`` என்பதன்பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. `தொல் பதம்` என்பது, எதுகை நோக்கி, ``தொற்பதம்`` எனத் திரிந்து நின்று. பதம் - நிலைமை. தீர் பாழ் - தீர்ந்ததாகிய பாழ். இது பின்னர், `போதப் பாழ்` எனக் குறிக்கப்படும். `அப்புறமாய்` என ஆக்கமும், ``இங்கு`` என்பதன்பின், `அதற்கு` என்பதும் வருவிக்க.
இதனால், சிவசத்தி திரோதான சத்தியாய் நின்று செயற்படுதலால் வரும் பயன் கூறப்பட்டது.