ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்

பதிகங்கள்

Photo

துரியங் கடந்து துரியாதீ தத்தே
அரிய இயோகங்கொண் டம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூத்தே
தெரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

English Meaning:
He Dances in Space and Lurks Inside the Deep Well of Pranava

Transcending Turiya
And entering Turiyatita,
Is the endless Space;
There vision the mighty Lord
That dances eternal;
They who can peer
Into the deep well of Pranava (Aum) within,
And glimpse Him
Will no more birth have.
Tamil Meaning:
யோகாவத்தையில், அனாகதம், விசுத்தி ஆஞ்ஞை, பிரமரந்திரம், துவாதசாந்தம் என்பன முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகட்குரிய தானங்க -ளாகும். அவற்றுள் துரியத்தானமாகிய பிரமரந்திரத்தையும் கடந்து, அதீதத் தானமாகிய துவாத சாந்தத்தில், அரிதாகிய அம்பலத்தில் பொருந்தி ஆடுபவன் பெரிய பெருமான்; மகாதேவன் அந் நடனத்தைக் காணுதல் பிரணவ கலைகளின் வழியாகவே கூடும் ஆகையால், அவ்வழியால் அக்கூத்தில் அவனைக் காணவல்லவர்க்கு மலக்குற்றங்கள் இல்லையாகும்.
Special Remark:
துரியம், துரியாதீதம் என்பன அவற்றிற்குரிய இடங்களைக் குறித்தன. ``அம்பலத்து`` என்பதை, ``அரிய`` என்பதன் பின்னர்க் கூட்டுக. அரிய அம்பலம் - சிதாகாசம்; ``இயோகம்`` என்பதில் இகரம் விரித்தல். யோகம் - கூடுதல். சேர்தல். பிரணவக் கூத்து - பிரணவத்தின் வழியாக அடையப்படும் கூத்து. `கூபத்தே` என்பது பாடம் அன்று. ஏகாரம் பிரிநிலை அதனால் பிற வழிகளால் அடைதல் பிரிக்கப்பட்டது. ``கூத்தே`` என்பதில் ஏழாவது விரிக்க.
இதனால், `பரபோதத்தால் உண்மையாக அடையத்தக்க பரம்பொருள், பிரணவ யோகத்தால் பொதுவாக - ஒருவாறாக அடையப்படும்` என்பது கூறப்பட்டது. அடைந்தவர் பெறும் பயனும் உடன் கூறப்பட்டது.