ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்

பதிகங்கள்

Photo

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா
மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

English Meaning:
Para Jiva that Had Become Tat-Para, Jiva, Now
Merges in Siva Himself

He, Nandi, is within Atita
And Beyond it;
He, Jiva that had Para-Jiva become
Is within Atita
Yet Jnana (Full) without;
The Para Jiva attaining Jnana
And rid of dark Ignorance
Will with God (Pati) One be.
Tamil Meaning:
சிவன் நின்மல துரியாதீதத்தில் ஞேயமாய் வெளிப் பட்டுப் பின்பு அதனையும் நீங்கி நிற்பான். (அஃதாவது, `போக்கியப் பொருளாகாது நிற்பான்` என்றபடி. அவன் போக்கியப் பொருளாதல் பராவத்தைகளிலாம்) அந்நிலையில் உயிர் தற்போதத்தை இழந்து நிற்கும். ஞானத்தைப் பெற்று, அஞ்ஞானத்தினின்றும் நீங்கிய உயிரே, ஒன்றாகிய பதிப்பொருளில் அழுந்தி அதுவாகும். அங்ஙனம் ஆய பொழுது அந்த உயிரே `பரமான்மா` என்னும் பெயரைப் பெறும்.
Special Remark:
``ஆகி அகன்றவன்`` என்றமையால் அவ்வதீதம் நின்மலாதீதமாயிற்று. இரண்டாம் அடியில் `அவ்வதீதத்துள்` என எடுத்துக்கொண்டுரைக்க. ``இருள்`` என்றது வாதனை அளவாய் நிற்கும் ஆணவ மலத்தை அதுவும் நீங்குதல், தேகம் நீங்கிய பின்பாம். ஆகவே, `இருள்விட்ட மன்னுயிர்`` என்றது பராதீதத்தை அடைந்த வுயிரையாம். பரான்மாவை அடைந்த பொழுது சீவான்மாவும் `பரமான்மா` எனப் பெயர்பெறும் - என்பது சர்வஞ்ஞானோத் தரத்திலும் கூறப்பட்டது. ``பர உயிர் தானே`` என்பதை, `தான் பர உயிரே` என மாற்றியுரைக்க.
இதனால், `சகல கேவலங்களில் பாலில் நெய்போல் விளங்காமலும், சுத்தத்தில் நின்மலாவத்தையில் பாசி படுகுட்ட நீர் போல ஒருகால் விளங்கியும், மற்றொருகால் விளங்காதும், பரா வத்தையில் தயிரில் நெய்போல விளங்கியும் நிற்பது பரம் என்பது கூறப்பட்டது. அந்நிலைகளில் ஆன்மா எய்தும் பயனும் விளங்குதற் பொருட்டு உடன் கூறப்பட்டது.